நோய் எதிர்க்கும் இயற்கை பானம்.

Image

எந்தவொரு டானிக் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் மட்டுமே போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிட முடியாது. பெரும்பாலான வைட்டமின்கள் ஏமாற்றம் தருவதாக இருக்கும் நிலையில், நெல்லி பானத்தில் நிச்சயமாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

நாட்டு நெல்லிக்காய் சாறு 50 மி.லி., துளசி இலை சாறு 50 மி.லி., இஞ்சி சாறு 10 மி.லி. சாறு, எலுமிச்சை 5 மி.லி. சாறு எடுத்து 150 மி.லி. தண்ணீரில் கலந்து கால் டீ ஸ்பூன் மஞ்சள் பொடி கலந்து குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  இதனை பெரியவர்கள் 250 மி.லி.யும், சிறியவர்கள் 100 மி.லி.யும் குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு வேளை பருகலாம்.

இன்னொரு வகையில் இஞ்சி, துளசி, மிளகு, அதிமதுரம், மஞ்சள் பொடி போன்றவற்றை தண்ணீரில் போட்டு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைத்து, வடிகட்டினால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை சூப் தயாராகிவிடும். இதனை பெரியவர்கள் 50 மி.லி.யும், சிறியவர்கள் 20 மி.லி.யும் காலை, மாலை என இருவேளை பருகலாம். நோயை எதிர்த்து நிற்கலாம்.

Leave a Comment