சென்னையில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி  260

எந்த ஒரு இடத்துக்குச் செல்வதாக இருந்தாலும், அந்த இடத்துக்கு அருகில் டூவீலர், கார் போன்றவைகளை நிறுத்திவிட்டுச் செல்லவே மக்கள் விரும்புவார்கள். நீண்ட தூரம் தள்ளி நிறுத்த மாட்டார்கள். எனவே, நெரிசல் நிறைந்த பகுதியில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார் மேயர் சைதை துரைசாமி.

இதற்கு அதிகாரிகள் மட்டுமின்றி பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நமது மக்கள் இன்னமும் அடுக்குமாடி வாகன நிறுத்தத்திற்குப் பழகவில்லை, பொறுமையாக இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் காரணம் சொல்லி தட்டிக்கழிக்க முயன்றார்கள். ஆனால், இந்த திட்டமே நிரந்தரத் தீர்வு என்பதிலும், நீண்ட காலத்துக்குப் பயனளிக்கும் என்பதிலும் மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார். இந்த வாகன நிறுத்தத்தை சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களும் நாள் கட்டணம், மாதக் கட்டணம் கட்டி நிறுத்திக்கொள்ள முடியும் என்று திட்டமிட்டார்.

அந்த வகையில் முதலில் சென்னையின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றான தியாகராஜ நகர் சாலையில் மாதிரி அடுக்குமாடி வாகன நிறுத்தம் கொண்டுவர முடிவு செய்தார். பாண்டி பஜார், தி.நகர் வர்த்தக மையங்களுக்கு வரும் ஏராளமான நபர்கள் பார்க்கிங் இல்லாமல் தடுமாறுவதால், அந்த பிரச்னைக்கு நல்ல தீர்வாக இருக்கும் என்று திட்டமிட்டார்.

மேயர் சைதை துரைசாமிக்கு முன்பு இருந்த மேயர்கள் யாரும் இந்த நெரிசலுக்குத் தீர்வு காண வேண்டும் என்று யோசிக்கவும் இல்லை, திட்டமிடவும் இல்லை என்பது குறிபிடத்தக்கது. மேயர் சைதை துரைசாமி மட்டுமே வாகன நிறுத்தம் அவசியம் என்பது மட்டுமின்றி, அடுக்குமாடி வாகன நிறுத்தம் பற்றி திட்டமிட்டார். மேயர் சைதை துரைசாமியின் திட்டபடி தி.நகரில் தணிகாசலம் தெரு சந்திப்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான மின்பொருள் சேமிப்புக் கிடங்கு இருக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment