அவள் : என் மாமியார் படத்தை மாட்டி வைச்சதுக்காக சண்டைக்கு வர்றாங்க…
இவள் : ரொம்ப அநியாயமா இருக்கே, எங்கே மாட்டி வைச்சே…
அவள் : எங்க தெருவோட பப்ளிக் டாய்லட்ல
………………
அவள் : உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம, கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?
இவள் : என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க எங்கேயோ சந்தோஷமா இருக்கிறதா கேள்விப்பட்டேன். அப்படியெல்லாம் விட்டுடுவேனா!
……………………
போலீஸ் : மாமியார் முகத்துல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?
இவள் : முகத்துல ரொம்பவும் சுருக்கம் விழுந்திருச்சுன்னு வருத்தப்பட்டு சொன்னாங்க… அதான்.
………………..
டாக்டர் : உங்களுக்கு உடம்புல ஒரு பிரச்னையும் இல்லை… நீங்க குத்துக்கல் மாதிரி நூறு வருஷம் இருப்பீங்க…
மாமியார் : இந்த நல்ல தகவலை முதல்ல என் மருமகளைக் கூப்பிட்டுச் சொல்லுங்க.
……………………………
மருமகள் : என் மாமியாருக்கு உடம்பு எப்படி இருக்குது டாக்டர்…
டாக்டர் : கவலைப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்லைம்மா…
மருமகள் : நீங்க எப்பவும் இப்படித்தான் நெகடிவ்வா பேசிக்கிட்டு இருந்தா, இனிமே இங்கே கூட்டி வர மாட்டேன் டாக்டர்.