என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 92
சென்னையில் இருந்த 17 லட்சம் வீடுகளையும் சுமார் 500 முதல் 550 வீடுகள் கொண்ட 3,200 சிறு வட்டங்களாக பிரிக்கவேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டதைக் கண்டு அதிகாரிகள் வியந்து நின்றார்கள். ஏனென்றால், எந்த ஒரு மேயரும் இந்த அளவுக்கு நுணுக்கமாக கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்து சிந்தனை செய்வது இல்லை. அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கு அனுமதி கொடுப்பதோடு நிறுத்திக்கொள்வார்கள்.
ஆனால், மேயர் சைதை துரைசாமி ஒவ்வொரு திட்டம் குறித்தும் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அந்த திட்டத்தை மென்மேலும் மெருகேற்றி செயல்படுத்தினார். சைதை துரைசாமியின் அறிவுறுத்தல் படி ஒவ்வொரு வட்டத்திலும் கொசுத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு மலேரியா தடுப்பு ஊழியர் நியமிக்கப்பட்டார். அந்த வகையில் மொத்தம் 3,200 தொழிலாளர்கள் கொசு ஒழிப்பு சிறப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர். அதுவரை, சென்னை மாநகராட்சியில், இத்தனை பெரிய கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை எனலாம்.
இந்த ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 80 வீடுகளை ஆய்வுசெய்து, தேவையான கொசு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். இதுதவிர கொசுக்கள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு என 113 சிறப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், அந்தந்தப் பகுதிகளில் அன்றாடம் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் வாரம் ஒரு முறை சென்று, மேல்நிலை மற்றும் கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்ற இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. வீட்டுக்கு வீடு மாநகரப் பணியாளர்கள் விசிட் செய்து, கொசு தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
- நாளை பார்க்கலாம்.