• Home
  • அரசியல்
  • மோடி போட்ட முதல் கையெழுத்து 2 ஆயிரம் ரூபாய்

மோடி போட்ட முதல் கையெழுத்து 2 ஆயிரம் ரூபாய்

Image

விவசாயிகளுக்கு ஜாக்பாட்

மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் நரேந்திரமோடி, முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவிக்கு ஓப்புதல் வழங்கியிருக்கிறார். இதன் படி 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள்.

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவே பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டம் உள்ளது. இதன் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளின் கணக்கில் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்தத் திட்டம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் ஒரே அடியாக அனுப்பப்படாமல் ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் மொத்தம் 3 தவணையாக அனுப்பப்படுகிறது.

வருடத்தின் மூன்றாவது முதல் நான்காவது மாதத்திற்கு ஒருமுறை பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளின் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகளின் கணக்கில் 16ஆவது தவணை பணம் செலுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, இப்போது மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் நாளில் 17ஆவது தவணை பணம் விவசாயிகளின் கணக்கில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

17ஆவது தவணைக்கான பணம் வந்ததா இல்லையா என்பதை எப்படிச் சரிபார்ப்பது என்று நீங்கள் யோசித்தால் அதற்கு பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம்.
ஒருவேளை பிஎம் கிசான் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் நீங்கள் புகார் அளிக்கலாம். பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றாலோ அல்லது பிஎம் கிசான் திட்டத்தின் 17ஆவது தவணைக்கான பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவில்லை என்றால் நீங்கள் 1800-115-5525 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதில் உங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்.

Leave a Comment