என்ன செய்தார் சைதை துரைசாமி – 251
சாலைகள் மேம்பாட்டுக்கு மேயர் சைதை துரைசாமி நிறைய திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார் என்று பார்த்துவருகிறோம். குறிப்பாக பேருந்து சாலைகளில் அவர் செய்த ஒரு மெகா சீர்திருத்தம் இன்று வரையிலும் பொதுமக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
பொதுவாகவே, அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் நகரப் பேருந்துகள் பஸ் நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றவும், இறக்கவும் செய்கின்றன. இப்படி சாலையில் பேருந்துகள் நிறுத்தப்படுவதன் மூலம் பின்னே வருபவர்கள் அனைவரும் வரிசை கட்டி நிற்கும் அளவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை முந்தி செல்வதற்கு சிலர் முயல்வதால் எதிர்பக்கம் வருபவர்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அதோடு, பாதசாரிகள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது.
பேருந்து நிறுத்தங்களில் இருந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது, யாருக்கும் இடையூறு இல்லாமல் பேருந்து நிறுத்தம் அமைப்பது எப்படி என்று மேயர் சைதை துரைசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்திவந்தார். இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமின்றி அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் பெரிதாக அக்கறை காட்டவில்லை.
சாலையில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிக்கொள்வதும், சில நிமிடங்களில் நகர்ந்துவிடுவதும் காலம் காலமாக நடந்தே வருகிறது. இந்த நேரத்தில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கலை சீர்படுத்த நினைப்பது வீண் செயல் என்றே கருதினார்கள். ஆனால், மேயர் சைதை துரைசாமி இந்த குளறுபடிக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்த நேரத்தில், விவேகானந்தர் இல்லம் அருகே இருந்த பேருந்து நிறுத்தம் செயல்படாமல் இருப்பதாகத் தகவல் வந்தது. அங்கு பஸ் நிறுத்தம் செயல்படாமல் இருப்பதால் பயணிகள் சிரமப்படுகிறார்கள், அதனை செயல்படுத்த வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமிக்கு ஆசிரமத்தில் இருந்து விண்ணப்பம் வந்தது.
- நாளை பார்க்கலாம்.