என்ன செய்தார் சைதை துரைசாமி – 269
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகில் சம்பாதித்த எல்லாவற்றையும் அள்ளியள்ளிக் கொடுத்தார். கட்சிக்காக இரவும் பகலும் பாடுபட்டார். சினிமா நடிகராக இருந்த வரையில் அவருக்குப் பெரிதாக எதிரிகள் இல்லை. ஆனால், எப்போது அ.தி.மு.க. எனும் புதிய இயக்கம் தொடங்கி அரசியலில் கால் பதித்தாரோ அப்போதே நிறைய எதிரிகள் உருவானார்கள். ஆளும் தி.மு.க.வினர், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர், கூட்டணிக் கட்சியினர், கூடவே இருக்கும் எதிரிகள் என பலரையும் சமாளிக்க வேண்டிய நிலை உருவானது.
அதனால் தான் எம்.ஜி.ஆரால் சினிமாவைப் போன்று அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது என்றார்கள். அதாவது எம்.ஜி.ஆர். நல்லவராக இருப்பதால் அரசியலுக்கு சரிப்பட மாட்டார் என்று அரசியல் ஜாம்பவான்கள் ஆருடம் சொன்னார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். நல்லவர் மட்டுமல்ல, வல்லவராகவும் இருந்தார். அதனால் தான் அரசியல் எதிரிகள் எல்லாவற்றையும் சமாளித்து ஆட்சியைப் பிடித்தார். அவர் உயிருடன் இருந்த வரையிலும் எம்.ஜி.ஆரையும் அவரது ஆட்சியையும் யாராலும் அசைக்கவே முடியவில்லை.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பக்தரும் சீடருமான சைதை துரைசாமி மேயர் ஆன நேரத்தில் இதே கணிப்பையே பலரும் சொன்னார்கள். சைதை துரைசாமி நல்லவராக இருப்பதால் மேயர் பதவியில் தாக்குப் பிடிக்க மாட்டார் என்றே சொன்னார்கள். தினமும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தருவதைப் பார்த்தவர்கள், ‘ஆரம்ப ஜோரில் அப்படித்தான் இருப்பார், இரண்டு மாதத்திற்குப் பிறகு எட்டியே பார்க்க மாட்டார்’ என்று சொன்னார்கள். ஆனால், எல்லோரது கணிப்பையும் பொய்யாக்குவது போன்று மேயர் பதவியில் இருந்த காலம் வரையிலும் தினமும் 19 மணி நேரம் அயராது உழைத்தார்.
மேயருக்கு எதிராக மாநகராட்சியில் உருவான அரசியல் சூழ்ச்சிகளை எல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். புரட்சித்தலைவரைப் போலவே நல்லவராக மட்டுமின்றி வல்லவராகவும் இருந்த காரணத்தாலே எல்லா விஷயங்களிலும் தைரியமாக நடவடிக்கைகள் மேற்கொண்டார். மாநகராட்சி சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், ஏமாற்றுக்காரர்கள் மீது மேயர் சைதை துரைசாமி எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் அதிரடி ரகம்.
- நாளை பார்க்கலாம்.