என்ன செய்தார் சைதை துரைசாமி – 218
தினம்தோறும் சென்னை நகருக்கு குடிபெயர்ந்துவரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் சென்னை மாநகரின் விரிவாக்கத்திற்கு ஏற்ப, உட்கட்டமைப்பை உலகத்தரத்திற்கு மேம்படுத்த மேயர் சைதை துரைசாமி விரும்பினார். பெருநகர சென்னையின் 200 வார்டுகளிலும் உள்ள 33,000-க்கும் மேற்பட்ட சாலைகளையும் மேம்படுத்துவதற்கு விரும்பினார்.
சாலைகளின் தரத்தை வைத்தே ஆட்சியாளர்களின் நிர்வாகத் தன்மையை மக்கள் மதிப்பிடுவார்கள் என்பது மேயர் சைதை துரைசாமிக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவசரத்துக்கு சாலைகள் போட்டு பிரச்னையைத் தீர்க்க விரும்பாமல் தொலைநோக்குப் பார்வையுடன் யோசனை செய்தார். அதன் அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, பெருநகர சென்னையின் சாலை மேம்பாட்டுக்கு என தனியாக ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியமில்லை என்றே அதிகாரிகள் கருதினார்கள். முதல்வர் ஜெயலலிதா ஒப்புக்கொண்டாலும் நடைமுறைக்குக் கொண்டுவருவதில் நிறைய நிர்வாகப் பிரச்னைகள் இருந்தன. ஆகவே, மேயர் சைதை துரைசாமியே இந்த யோசனையைக் கைவிட்டு விடுவார்கள் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், தன்னுடைய கோரிக்கையில் தீவிரமாக இருந்த மேயர் சைதை துரைசாமி, தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து விடாப்பிடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்படி பிடிவாதமாக மேயர் சைதை துரைசாமி எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக தமிழக அரசு மூலம் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மேயர் சைதை துரைசாமிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
- நாளை பார்க்கலாம்.