மாணவர்களின் மனநலன் பாதுகாப்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 166

டீன் ஏஜ் என்பது மாணவர்களுக்கு மிகவும் குழப்பம் நிறைந்த பருவம். இந்த காலகட்டத்தில் ஆண், பெண் இரு பாலரிடத்தும் உடல்ரீதியிலும் மன ரீதியிலும் நிறைய மாற்றங்கள் உண்டாகும். எனவே, கட்டுப்பாடுகள் விதிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து ரொம்பவே விலகி நிற்பார்கள். நிறைய நேரம் நண்பர்களுடன் இருக்கவே விரும்புவார்கள்.

சினிமா மற்றும் போதை மாயையில் சிக்கி அலைபாயும் மனதுடன் இருக்கும் மாணவர்கள் படிப்பதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள். இந்த வயதில் வீட்டை விட்டு ஓடிப் போதல், தற்கொலை எண்ணம் மாணவர்களுக்கு வருவதுண்டு. எனவே, இந்த காலகட்டத்தில் மாணவர்கள் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது ஆசிரியர்களின் மற்றும் ஆட்சியாளர்களின் கடமை என்று நம்பினார் மேயர் சைதை துரைசாமி.

ஹார்மோன் மாற்றங்களால் நடக்கும் குழப்பத்தின் அபாயங்களை மாணவர்கள் அறிய மாட்டார்கள் என்பதால் அவர்களை நல்வழிப் படுத்துவதற்குத் திட்டமிட்டார். அதாவது மாணவர்கள் பகலில் பெரும்பாலான நேரம் பள்ளியில் தான் இருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நடவடிக்கைகளை ஆராய்ந்து நல்வழி காட்ட வேண்டும் என்று ஆசிரியர்களிடம் வலியுறுத்தினார்.

குறிப்பாக 8ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரையிலும் மாணவர்கள் நடவடிக்கையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் மாணவருடைய மனம் படிப்பை விட்டு வேறு திசையில் திரும்பிவிடக் கூடாது. மேலும் ஏதேனும் ஒரு மாணவர் தவறு செய்வதைப் பார்த்து, மற்றவர்களும் தவறு செய்வதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, அனைவரையும் கட்டுப்பாட்டுடன் பள்ளியில் வைத்திருக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.

அது மட்டுமின்றி, மாணவர்களின் உடல் மற்றும் மனநல சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நலவாழ்வு ஆலோசகர்களை நியமனம் செய்தார். குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கு நலவாழ்வு ஆலோசகர்கள் மூலம் நல்வழி காட்டப்பட்டது. மாநகராட்சி மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக இப்படியொரு நடவடிக்கை எடுத்த சைதை துரைசாமியின் மனிதநேயத்தை ஆசிரியர்களும் கல்வியாளர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள். 

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment