சீனாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 376

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் சீனா மக்கள் குடியரசின் வெளியுறவு அமைச்சகமும் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, சென்னை மாநகராட்சியும், சீனாவின் சொங்கிங் மாநகராட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது என 2013-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி பொதுக்கொள்கை, கல்வி, சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா, கலாச்சாரம், நகர்ப்புற திட்டமிடல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், கழிவுநீர் மேலாண்மை, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல், வணிக பரிமாற்றம் போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கு இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்காக மேயர் சைதை துரைசாமி சீனாவிற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டது. சென்னை மாநகராட்சிக்கு ஏதேனும் வகையில் உதவி, வழிகாட்டுதல் கிடைக்கிறது என்றால், அதனை ஒருபோதும் மேயர் சைதை துரைசாமி நழுவ விட மாட்டார். ஆகவே, இந்த பயணத்திற்குத் தயாராக இருந்தார். முன்னேறிய நாட்டின் மாநகராட்சியின் செயல்பாடுகளை அறிந்துவந்து, பெருநகர சென்னை மாநகராட்சியை நவீனப்படுத்தும் ஆர்வத்தில் இருந்தார்.

மேலும், இந்த பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்று கூறப்பட்டது. ஆகவே, இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு மேயர் சைதை துரைசாமி மிகவும் விருப்பம் காட்டினார். வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்பதால் இந்தியப் பிரதமருடன் கூடுதலாக கொஞ்சநேரம் செலவிட முடியும் என்பதால் இந்த பயணத்தை எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார்.

2013ம் ஆண்டு சீனப் பயணத்திற்குத் திட்டமிடப்பட்டது என்றாலும் அந்த ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டும் இந்த பயணம் குறித்து எவ்விதமான கூடுதல் தகவல்களும் கிடைக்கவில்லை. எனவே, இனி, சீனப் பயணத்திற்கும் இந்தியப் பிரதமர் சந்திப்புக்கும் வாய்ப்பு இல்லை என்று மனதை தேற்றிக்கொண்டார் சைதை துரைசாமி.

ஆனால், மேயர் சைதை துரைசாமி ஆசைப்பட்டது போலவே இந்தியப் பிரதமர் முன்னிலையில் கையெழுத்துப் போடுவதற்கு 2015ம் ஆண்டு அழைப்பு வந்தது. இந்த அழைப்பை எப்படியேனும் தடுக்க வேண்டும் என்ற அரசியல் சூழ்ச்சிகளும் நடந்தன.  

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment