பாரதப் பிரதமருடன் சீனாவில் சந்திப்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 379

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் சி ஜின்பின் முன்னிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு அவசரம் அவசரமாக பயணிக்கும் சூழல் மேயர் சைதை துரைசாமிக்கு ஏற்பட்டது. இந்த நெருக்கடியை மேயர் சைதை துரைசாமி திறமையாகவே சமாளித்தார்.

இரவு 9 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி கிளம்பிய மேயர் சைதை துரைசாமி, விமானநிலையத்தில் இருந்து நள்ளிரவு 12:30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தைச் சென்றடைந்தார். அடுத்த நாள் அதிகாலை எழுந்து யோகாசனம் உள்ளிட்ட காலைப் பணிகளை முடித்ததும் மதியம் 1:50 மணிக்கு சீனா செல்வதற்குச் செல்லும் விமானத்தைப் பிடித்து சீன நேரப்படி மாலை 7:30 மணிக்கு பேங்காக் சென்றடைந்தார்.

பேங்காக் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் சைனா சிஏ 98 விமானம் மூலம் பீஜிங் புறப்பட்டார். அந்த விமானம் மூலம் அதிகாலை 6:45 மணிக்கு பீஜிங் நகரை அடைந்தார். அன்றைய தினம் காலை  பிரதமர் முன்னிலையில் கையெழுத்து இட வேண்டும். எனவே, ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல் அவசரம் அவசரமாக ஹோட்டல் ராஃபில்ஸ் சென்றார். ஹோட்டல் அறைக்குச் சென்றபோது 8:30 மணி ஆகியிருந்தது.

எனவே, அவசரம் அவசரமாக காக்கா குளியல் போட்டுவிட்டு புதிய கோட் சூட் அணிந்துகொண்டு மிகச்சரியாக கிரெட் ஹால் ஆஃப் பீப்பிள் வென்யூவைச் சென்றடைந்தார். இந்த இடத்தில் தான் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் சி ஜின்பின் ஆகியோர் முன்னிலையில் பெருநகர சென்னை மாநகர மேயர் சார்பில் கையெழுத்திட வேண்டும். தன்னால் நிகழ்ச்சிக்கு எவ்வித தடங்கலும் வந்துவிடக் கூடாது என்பதால் திட்டமிட்டு செயல்பட்டு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.

அங்கிருந்த பிரமாண்டமான ஹாலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிமுக்கிய நிகழ்வு அரங்கேறத் தொடங்கியது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment