• Home
  • சர்ச்சை
  • முன் ஜென்ம பாவத்துக்கு மகாவிஷ்ணுவுக்கு ஜெயில்.?

முன் ஜென்ம பாவத்துக்கு மகாவிஷ்ணுவுக்கு ஜெயில்.?

Image

சீமான் கடும் ஆட்சேபம்

பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பிய குற்றச்சாட்டில் மகாவிஷ்ணு ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், வேறு ஏதோ ஒரு செய்தியை மறைப்பதற்காக மகாவிஷ்ணு செய்தியைப் பெரிதாக்குகின்றனர் என்று சீமான் குற்றச்சாட்டு முன் வைத்திருக்கிறார்.

எந்த குற்றச்சாட்டின் கீழ் மஹாவிஷ்ணு கைது செய்யப்பட்டிருக்கிறார், சாட்டை துரைமுருகன் போன்று விடுதலை செய்யப்படுவாரோ என்று தி.மு.க.வினரே அச்சப்படுகிறார்கள்.

இது குறித்து விசாரித்ததில், ‘மஹாவிஷ்ணு மீது Bharatiya Nyay Sanhita (BNS) சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தின் பிரிவு 92 என மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

192: கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்தில் தூண்டுதல், – 196 (1) (a): மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி, சாதி அல்லது சமூகம் அல்லது வேறு எந்த அடிப்படையில், வார்த்தைகள், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது அடையாளங்கள் மூலம் அல்லது காணக்கூடிய பிரதிநிதித்துவங்கள் மூலம் அல்லது மின்னணு தொடர்பு மூலம் அல்லது மற்றபடி, பல்வேறு மத, இன, மொழி அல்லது பிராந்திய குழுக்கள் அல்லது சாதிகள் அல்லது சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையின்மை அல்லது பகைமை, வெறுப்பு அல்லது தவறான உணர்வுகள்; அல்லது ஊக்குவிக்கும் அல்லது ஊக்குவிக்க முயற்சிப்பது ஆகும்.

அதோடு  352: அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு, – 353 (2): மதம், இனம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு மதம், இனம், மொழி அல்லது பிராந்திய குழுக்கள் அல்லது சாதிகள் அல்லது சமூகங்களுக்கிடையில் பகை, வெறுப்பு அல்லது தீய உணர்வுகள் உருவாக்கும் எண்ணத்துடன் தவறான தகவல், வதந்தி அல்லது ஆபத்தான செய்திகள் அடங்கிய அறிக்கை அல்லது அறிக்கையை வெளியிடுவது அல்லது பரப்புவது.

 92 (a): மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான குற்றம் செய்வது. இத்தனை பிரிவுகளில் கைது செய்யப்பட்டிருந்தாலும் மாற்றுத் திறனாளி சார்ந்த செக்சன் மட்டுமே ஓரளவுக்குப் பொருந்துகிறது.  

ஆனால் மகாவிஷ்ணு அந்த மாற்றுத் திறனாளி ஆசிரியரை நேரடியாக அவமதித்தோ, அவர் ஊனத்தை வைத்து குற்றச் செயல் எதுவுமோ நடத்தவில்லை. அந்த அவர் மகாவிஷ்ணு பேசிய ‘உடல் ஊனம் என்பது பூர்வ ஜென்ம பாவத்தின் விளைவு,’ என்ற கூற்று ஆட்சேபத்துக்குரியது என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படும். அது மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான குற்றம் என்று கருதப்பட மாட்டாது என்று பா.ஜ.க.வினர் தி.மு.க. மீது குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அதேநேரம், ‘’முன் ஜென்ம வினையால் ஒருவர் ஏழையாகவும், ஊனமுற்றவராகவும் பிறப்பதாகச் சொன்ன மஹாவிஷ்ணு போன ஜென்மத்தில் என்ன குற்றம் செய்த காரணத்துக்காக இப்போது தண்டனை கிடைக்கிறது என்பதயும் கண்டறிய வேண்டும்’’ என்று தி.மு.க.வினர் கிண்டல் செய்துவருகிறார்கள்.

Leave a Comment