சும்மா சிரிங்க ஸார்
அவன் : ஹலோ, உங்களைப் பார்க்க என் மனைவி மாதிரியே இருக்கு….
அவள் : அப்படியா, உங்க மனைவி பேரென்ன?
அவன் : அதை நீங்கதான் சொல்லனும்.
………………….
காதலி : என்னங்க நீங்க…. மல்லிகைப் பூ, அல்வான்னு வாங்கிட்டு வராம, இப்படி கற்பூரம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க?
காதலன் : நீதானம்மா நம்ம காதல் தெய்வீகக் காதல், புனிதமானதுன்னு சொன்னே.
……………………..
காதலன் : இதுக்கு முந்தி நீ யாரையாவது காதலிச்சிருக்கியா…?
(காதலி அமைதியாக ஏதோ முணுமுணுப்பதைக் கண்டு, அவள் கோபத்தில் இருக்கிறாள் என்பதை புரிந்துகொள்கிறான்)
காதலன் : ஸாரிம்மா, உன்கிட்டே இப்படி கேட்டிருக்கக்கூடாது.
காதலன் : ச்சே, ஒரு நிமிஷம் பேசாம சும்மா இருக்கீங்களா..? சரியா எண்ணவே முடிய மாட்டேங்குது.
………………………..
காதலி : என்னங்க, நாம கல்யாணம் முடிச்சதும் தனிக்குடித்தனம் போயிடலாம்..
காதலன் : என் பொண்டாட்டி அதுக்கு சம்மதிக்க மாட்டாளே டார்லிங்.
………………………….
காதலி : ஏன் எப்பப் பார்த்தாலும் இந்த ஜூஸ் கடையிலேயே மீட் பண்ணச் சொல்றீங்க, வாங்களேன் பீச்சுக்குப் போகலாம்.
காதலன் : சுண்டல்காரனை நான் இன்னும் ஃப்ரெண்ட் பிடிக்கலையேம்மா…