கலகலன்னு சிரிங்க
’’ஸ்கூல் வாத்தியாரை லவ் பண்ணியது தப்பாப் போச்சுடி..”’
‘’என்னாச்சு..?’
‘’அஞ்சு நிமிஷம் லேட்டாப் போயிட்டேன். இனிமே லேட்டா வரமாட்டேன்னு நாளைக்கு 100 தடவை எழுதிட்டு வரச் சொல்லிட்டார்…”
……………………
‘’என் காதலன் இப்படி செய்வான்னு நான் கொஞ்சம்கூட நினைக்கவே இல்லடி, ரொம்பவும் கவலையா இருக்குது.”
‘’என்னாச்சு, உன்னை கழட்டிவிடப் பார்க்கிறானா..?’
‘’இல்லடி, என்னையே கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறான்”
……………………….
’’டியர், உன்னோட பர்த்டேக்கு என்ன வேணும். ஆயிரம் ரூபா பட்ஜெட்ல கேளும்மா… என் ஃப்ரண்ட் மாதவன் மாதிரி நான் பணக்காரன் இல்லே..”
‘’கிஃப்டா நீங்க ரொம்பவும் சிரமப்பட வேண்டாங்க. உங்க ஃப்ரண்ட் மாதவன் போன் நம்பர் மட்டும் குடுங்க போதும்…”
……………………….
என் மேல உங்களுக்கு எத்தனை அன்பு இருந்தா, அப்படியே கட்டுன புடவையோட வரச்சொல்வீங்க.. எனக்கு மாத்துப் புடவை வேணும்னா என்ன செய்றது..?
‘’கவலையேபடாதே திவ்யா. என் பொண்டாட்டி நிறைய புடவை வச்சிருக்கா…’
…………………………
’’என்னை நீங்க கண்டிப்பா கைவிட மாட்டேங்களே…”
‘’ச்சேச்சே, நான் அப்படியெல்லாம் செய்யவே மாட்டேன். ஏன் என்னை நீ நம்ப மாட்டேங்கிறே..”
‘’இதுக்கு முந்தி வைத்தியநாதனும், பெருமாளும் இப்படித்தான் சொன்னாங்க, ஆனா, கைவிட்டுட்டாங்களே…”
…………………………
’’என்ன டியர், திடீர்னு உன்னோட பழைய காதலன் திரும்பிவந்துட்டான்னு சொல்லி என்னை கழட்டி விடுறியே..?”
‘’கவலைப்படாதீங்க டியர், உங்களுக்கு திரும்பவும் சான்ஸ் தரமுடியுதான்னு பார்க்கிறேன்…”
………………………