அன்பென்பது…
யாரையும்
காயப்படுத்தி விடக்கூடாது
என்பதற்கான ஒரு விலகுதல்
நேசித்தலை விட
அழகானது..!!
- விசித்திரன்
எல்லாமும்…
ஆடும்போது ஆடு.
பாடும்போது பாடு.
படிக்கும்போது படி.
தூங்கும்போது தூங்கு.
வாழும்போது வாழு.
சாகும்போது செத்துவிடு
புலம்பாதே.
அது ஓர் அரிய வாய்ப்பு
அது ஓர் அழகிய வாய்ப்பும்கூட…!!
- கண்ணன் புலமி