• Home
  • அரசியல்
  • விஜய் பேரைச் சொல்ல பயப்படுகிறாரா ஸ்டாலின்..?

விஜய் பேரைச் சொல்ல பயப்படுகிறாரா ஸ்டாலின்..?

Image

தி.மு.க. புறக்கணிப்பு அரசியல்

விஜய் மீது சீமான் அதிரடித் தாக்குதல் நடத்தியதையடுத்து பனையூரில் நடந்த கூட்டத்தில், நாம் தமிழர்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லுங்கள் என்று உத்தரவு போட்டார். இப்போது அவரது பாணியில், ‘வாழ்க வசவாளர்கள்’ என்று விஜய்யை கண்டுகொள்ளப் போவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

இன்று கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், ‘’தி.மு.க எதையும் செய்யவில்லை என பலர் கூறுகிறார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகளில் தி.மு.க செய்த திட்டங்கள் என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். மீதமுள்ள திட்டங்களையும் வரவிருக்கும் காலங்களில் விரைவாக நிகழ்த்துவோம்.

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க ஒழிய வேண்டும், அழிய வேண்டுமென்ற நோக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தி.மு.க பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலையும் இல்லை. அறிஞர் அண்ணா பாணியில் வாழ்க வசவாளர்கள் எனக் கூறி கொள்ள விரும்புகிறேன்’’ என்று விஜய் பேச்சுக்கு கருத்து கூறியிருக்கிறார்.

இதற்கு தி.மு.க.வினர், ‘’விஜய்யை எல்லாம் நாம கண்டுக்கத் தேவையே இல்லை என்று நெத்தியடி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்’’ என்று புல்லரிக்கிறார்கள். அதேநேரம், விஜய் கட்சியினரோ, ‘’ஸ்டாலினுக்குத் தைரியம் இருந்தால் பெயர் சொல்லி கண்டிக்கச் சொல்லுங்க பார்க்கலாம்’’ என்று சவால் விடுகிறார்கள்.

சீமான் சண்டைக்கு வந்தா விஜய் கடந்து போறார், விஜய் சண்டைக்கு வந்தா ஸ்டாலின் கடந்து போறார். இப்படி ஆளாளுக்கு ஒருவர் சொல்வதை ஒருவர் கண்டுகொள்ளவில்லை என்றால் அரசியல் எப்படி சூடு பிடிக்கும்?

Leave a Comment