வாழ்வை மாற்றும் குட்டிக் குட்டி தத்துவங்கள்

Image

வார்த்தைகளே வரம்

காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த புற்களும் வளர்ந்துவிடும். அப்படித் தான் சின்னச்சின்ன வார்த்தைகள் மனிதர்களின் வாழ்க்கையையும் மனநிலையையும் மாற்றிவிடக் கூடும். அப்படி காலத்தால் அழியாத சில குட்டிக் குட்டி தத்துவங்கள் இங்கே.

  • ஒரு விவாதம் நீண்டு கொண்டே போகிறது எனில் அதில் பங்கு கொண்ட இரு தரப்பினர் மீதும் குற்றம் இருக்கிறது என்பது பொருள். – வால்டேர்
  • அழகான ஒன்று கிடைத்தவுடன் அதைவிட அழகானதைத் தேடாதீர்கள். இரண்டையும் இழந்து விடுவீர்கள்.. – ஷேக்ஸ்பியர்
  • இயற்கையுடன் உறவை மனிதர் இழக்கும்போது, ​​கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. – ஜே.கிருஷ்ணமூர்த்தி
  • மறைந்தவர் பற்றி நல்லதை பேச வேண்டியது அவசியமல்ல, உயிருடன் இருப்பவர்களைப் பற்றி நல்லதாகப் பேசுவதே முக்கியம். – டால்ஸ்டாய் ~
  • எவரொருவர் தன்னிடம் இருப்பதில் மகிழ்ச்சி அடையவில்லையோ, அவர் எது கிடைத்தாலும் மகிழ்ச்சியடைய மாட்டார். – ஓஷோ
  • எல்லா குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது மனிதர்கள் நேசிக்கபடாமல் புறக்கணிக்கப்படுவதே – தஸ்தாயெவ்ஸ்கி
  • மரணம் மட்டும்தான் எல்லா காலத்திலும் நிச்சயிக்கப்பட்ட உண்மை. மற்றவை எல்லாமே மாறக்கூடியவை – ஏங்கெல்ஸ்
  • பிச்சைக்காரர்கள் ஒருபோதும் கோடீஸ்வரர்களைக் கண்டு பொறாமைப்படுவதில்லை,  தன்னை விட அதிகமாய் பிச்சை எடுப்போரைக் கண்டு தான் பொறாமைப்படுகிறார்கள் – ரஸ்ஸல்
  • யார் என்ன சொல்வார்கள் என்று நீங்கள் நினைக்கு ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்க்கை பறிபோகிறது. – கெளதமபுத்தர்.
  • எதற்கும் தயாராக இருப்பவர்களால் மட்டுமே வாய்ப்புகள் வரும்போது பற்றிக்கொள்ள முடியும். – ஆபிரஹாம் லிங்கன்.
  • நமது வாழ்வு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே மனித துன்பத்திற்கு காரணம். நிரந்தரம் என்று எதுவும் இங்கு இல்லை. –
  • யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி
  • எறும்பு, ஈ, கொசுக்களை விட எந்த ஒரு பெரிய நோக்கத்திற்காகவும் மனிதர்கள் படைக்கப்படவில்லை. – யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி

Leave a Comment