உறவுக்கு கை கொடுப்போம்..!

Image

சொந்தங்கள் இனிமையானவை



கால மாற்றத்தால் இன்றைய உறவுகள் எல்லாம் பல இடங்களில் பிரிந்து வாழ்கின்றனர். அவர்கள் அடிக்கடி சந்திக்க முடியாமல் போகின்றனர். அதனால், உறவு என்பது பலருக்கு எட்டா தூரத்திலேயே இருக்கிறது.  ஆனால், இந்த தூரம் என்பது அதிகமில்லை. ஆம், எங்கிருந்தாலும் இனிமையுடன் இணைந்துவாழ முடியும்.

சொந்தங்களால் எந்த பயனும் கிடையாது என்று பலரும் நினைப்பது உண்மையல்ல. மகிழ்ச்சி மற்றும் துயரம் ஏற்படும் தருணங்களில் மனிதருக்கு பக்கபலமாக இருப்பவை உறவுகளே. அதிக ஆதாயம் எதிர்பார்ப்பவருக்கே உறவுகள் உடைந்து போகின்றன. ஆபத்து நேரங்களில் கைகொடுக்கும் உறவுகள் நிறையவே உண்டு.

எனவே, உறவுகளை ஒரு போதும் கைவிட வேண்டாம். விலகவும் வேண்டாம், நெருங்கவும் வேண்டாம். அதேநேரம், இந்த உறவுகள் என்றென்றும் இனிப்பாக இருப்பதற்கு சின்னச்சின்ன விஷயங்களை கடைபிடித்தாலே போதும்.  நம் வாழ்க்கை சுலபமாகவும் இனிமியாகவும் மாறிவிடும். அப்படி, உறவுகளை கைக்குள்ளேயே வைத்துக்கொள்வதற்கான வழிகள் இதோ.

  • எந்த ஒரு சூழலிலும் சந்தேகம்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏதேனும் சந்தேகப்படுவதற்கான சூழல் ஏற்பட்டால், நிதானமாக பேசி, சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
  • எந்த ஒரு சங்கடமான சூழலில் தவறான வார்த்தைகளை விடக்கூடாது.
  • ஒருவரின் கருத்து சரியோ, தவறோ அதை மதிப்பளித்து, முழுமையாகக்  கேட்க வேண்டும்.
  • வீண் வாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • வயதிற்குரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்.
  • வாழ்ந்து அனுபவித்தவர்களின் அறிவுரையை சற்றேனும் காது கொடுத்து கேட்க வேண்டும்.
  • எல்லோரிடமும் செலுத்தும் அன்பு நடிப்பாக இல்லாமல்,  உண்மையாக இருக்க வேண்டும்.
  • விட்டுக்கொடுப்பதற்கு தயங்கக்கூடாது.
  • ஓர் உறவினைரைப் பற்றி, மற்ற உறவினரிடம் புறம் பேசக் கூடாது.
  • ஓர் உறவினருடைய உயர்விலும் சரி, தாழ்விலும் சரி அவருக்கு துணையாக/ஆறுதலாக இருத்தல் வேண்டும். பணம் கொடுப்பதைவிட, உறுதியாக உடன் நிற்பது உயர்ந்தது.
  • ஒட்டுமொத்த உறவினர்களும் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து தினப்படி முக்கிய நிகழ்வுகளை பகிரலாம்.
  • அனைத்து உறவுகளும் ஒரு கால அட்டவணை தயார் செய்து, அவ்வப்போது ஓர் உறவினர் வீட்டில் அனைவரும் சேர்ந்து சந்திக்கலாம்.
  • பண்டிகை மற்றும் உறவுக்காரர் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் அனைவரும் ஒன்றுகூடிபார்ட்டி வைக்கலாம்.
  • வருடம் ஒருமுறை அனைவரும் ஒன்றுகூடி, குலதெய்வ வழிபாடு நடத்தலாம்.
    கோவில்களுக்கோ அல்லது சுற்றுலா இடங்களுக்கோ வருடம் ஒரு முறை குடும்ப சுற்றுலா சென்றுவரலாம்.

ஒரு குடும்பத்தில் சண்டை ஏற்படும்போது, தேவையற்ற வகையில் தலையிட்டு கருத்துக்களை சொல்லக்கூடாது. ஏனென்றால், மூன்றாவது நபரின் தலையீடு காரணமாகவே பெரும்பாலான வீடுகளில் பிரச்னைகள் ஏற்படுகிறது.

உறவுகள் என்பது வாழ்வில் கிடைத்திருக்கும் வரம் என்பதை மனதார உணர்ந்து, மதிப்பு கொடுங்கள். வாழ்க்கை இனிப்பாக இருக்கும்.

Leave a Comment