விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா
மகிழ்ச்சியுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று வீடு கட்டுகிறார்கள். ஆனால், அந்த இடத்திற்கு பட்டா இல்லை என்று தெரியவந்தால் வாழ்நாள் முழுவதும் நிம்மதி பறி போய்விடும். அந்த இடத்துக்குப் பட்டா இல்லை என்பதுடன் அது புறம்போக்கு நிலம், எந்த நேரமும் அரசு எடுத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு என்பது தெரியவந்தால் அவ்வளவுதான். அத்தனை காலமும் சேர்த்துவைத்த பணமும் வீணாகி, நிம்மதியும் இழந்து வாழ்க்கையே நரகமாக மாறிவிடும்.
அப்பா ஒரு வீடு கட்டியிருப்பார். உயில் எதுவும் எழுதாமல் திடீரென மரணம் அடைந்துவிடுவார். இது போன்ற சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் அடிதடி சண்டை நடப்பதுண்டு. இதனால் யாருக்கும் பயன்படாமல் பூட்டப்படும் நிலைமையும் ஏற்படலாம்.
நிலம், வீடு, பட்டா, சிட்டா, பத்திரம் என்று எக்கச்சக்க சிக்கல்கள் இருக்கின்றன. ஆகவே, நிலம், வீடு வாங்கும் நேரத்தில் வழக்கறிஞர் உதவியுடன் முழுமையாக விசாரணை செய்வது நல்லது. ரியல் எஸ்டேட் பிசினஸ் என்றாலே சீட்டிங் என்ற நிலை நிலவுகிறது. இல்லாததும் பொல்லாததும் சொல்லி வீட்டை விற்பனை செய்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள்.
இது போன்ற தருணங்களில் பிரச்னைகளில் எப்படி தப்புவது என்பது போன்ற அத்தனை சந்தேகங்களுக்கும் சட்டத்தில் விடை இருக்கிறது.
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு சட்டம் ஒரு வகுப்பறை என்ற நிகழ்ச்சியை யாழினியுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார் பிரபல வழக்கறிஞர் நிலா. போன் செய்தும் சந்தேகம் கேட்கலாம். சட்டத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேட்கலாம். உங்கள் சந்தேகங்களை நிலா நிச்சயம் தீர்த்து வைப்பார்.