நீதிமன்றம் மீது பா.ஜ.க. புகார் குடுக்குமா?
லட்டு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்பதை தனக்கே உரித்தான பாணியில் பரிதாபங்கள் டீம் ஒரு வீடியோ போட்டது. உடனே இந்துக்களை அவமானம் பண்ணிட்டாங்க, மனசு புண்ணாப் போயிடுச்சு என்று பா.ஜ.க.வினர் போலீஸில் புகார் கொடுத்தார்கள். இப்போது அதே குற்றச்சாட்டை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதற்காக பா.ஜ்.க.வினர் நீதிமன்றத்தின் மீதும் புகார் கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய்தான் பயன்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு பதவியில் உள்ள முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது! ஒப்புதல் அளிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததா? கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் நெய், திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்டதா என்பது தெளிவுபடுத்தப் படவில்லை என்று உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியதுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆய்வக அறிக்கையில் சோயாபீன் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயாக கூட இருக்கலாம் என்றுதான் சொல்கின்றது அப்படி என்றால் அதில் மீன் எண்ணெய் கலக்கப்பட்டது என்று பொருளாகாது என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஸ்ரீதர் சுப்பிரமணியம், ‘’திருப்பதி லட்டு விவகாரம் வெடித்த போது பலரும் எள்ளலும், கேலியும், கிண்டலும், விமர்சனமுமாக வலம் வந்த போது சேப்பியன் சங்கத்தில் ஒரு வீடியோ போட்டிருந்தோம். அதில் அந்த பரிசோதனைக் கூட அறிக்கையில் தெளிவாக விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பதாக குறிப்பிடவில்லை; பல்வேறு false positiveகள் பற்றிய டிஸ்களைமர் இருக்கிறது; எனவே இந்த ஒரே ஒரு அறிக்கையை வைத்து விலங்குக் கொழுப்பு உள்ளது என்று முடிவுக்கு வந்து விட முடியாது என்றும் சங்கத்தின் சைண்டிஸ்ட்களில் ஒருவரான ஹாலாஸ்யன் வாதிட்டு இருந்தார்.
அந்த வீடியோ வெளியான போது பலரும் எங்களை ‘சங்கிகள்’ என்று அடையாளப்படுத்தி விமர்சித்தார்கள். வேண்டுமென்றே சர்ச்சையை நீர்த்துப் போக முயற்சி செய்கிறோம் என்றும் கடிந்து கொண்டார்கள். ‘முரட்டு முட்டு பாஸ்’ என்று பலர் கேலி செய்தார்கள். இந்த சர்ச்சை குறித்த ஒரு வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற பெஞ்சு ஒன்று சேப்பியன் காணொளியில் கேட்டிருந்த அதே கேள்விகளை இன்று ஆந்திர மாநில அரசின் வழக்கறிஞரைக் கேட்டிருக்கிறது.
‘நெய்யில் விலங்குக் கொழுப்பு உள்ளது என்று தெளிவாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே!’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘இதில் இத்தனை false positiveகள், டிஸ்களைமர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் முழுவதுமாக பரிசீலிக்காமல் ஏன் ஊடகங்களிடம் போனீர்கள்?’ என்று நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள். ‘அறிக்கை வந்ததுமே இன்னும் ஓரிரு கூடங்களில் second opinion வாங்கி இருக்க வேண்டும். அதற்குள் முதல்வர் பொதுவெளியில் அறிக்கை விடுத்தது தவறான செயல்,’ என்றும் ‘அரசியலுக்கு கடவுளர்களைக் கூட்டி வராமல் இயங்க முனைய வேண்டும்,’ என்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் நேரடியாக கடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சர்ச்சை குறித்து மேலும் ஆராய வேண்டுமா அல்லது இப்படியே முடித்துக் கொள்ளலாமா என்று கருத்து தெரிவிக்கும்படி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை கேட்டுக் கொண்டு விசாரணையை வியாழக் கிழமைக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
லட்டுவில் அரசியல் செய்தவர்கள் இன்று அவமானப்பட்டு நிற்கிறார்கள்.