• Home
  • அரசியல்
  • டாப் ட்ரெண்டிங்கில் கூமுட்டை விஜய்… மூடர் கூடம் சீமான்

டாப் ட்ரெண்டிங்கில் கூமுட்டை விஜய்… மூடர் கூடம் சீமான்

Image

தரமான அரசியல் சம்பவங்கள்

தம்பி என்னை அழைத்தால் கூட்டணிக்கு சம்மதிப்பேன் என்று வாய் நிறைய தம்பி தம்பி என்று விஜய்யிடம் உருகிய நாம் தமிழர் சீமான் திடீரென கூமுட்டை விஜய் லாரியில் அடிபட்டு சாகப் போகிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்யவே, கூமுட்டை விஜய் என்பது டாப் டிரெண்டிங்காக மாறியிருக்கிறது.

சென்னை பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்கிறார். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன ரெண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?. அண்மையில் வந்த படத்தில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் அவரே நடித்ததால் குழம்பிவிட்டார் போல். நீங்கள் சொல்வது கொள்கையே இல்லை. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும். திராவிடமும், தேசியமும் ஒன்று என்பது நடுநிலை இல்லை. மிகக் கொடுமையான நிலை.

நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிதான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பி.ஹெச்டியே வாங்கிவிட்டோம். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி. இது நெஞ்சு டயலாக்.

எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026 ஆம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது.” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் அக்.27-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து பேசிய விஜய், “கொள்கை கோட்பாட்டு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து.” எனப் பேசினார்.

இதையடுத்து சீமானின் தம்பிகள் விஜய்யை வைச்சு செய்கிறார்கள். எங்களைத் தொட்டிருக்கக் கூடாது ப்ரோ,  தப்பு பண்ணிட்ட என்று கிண்டலடிக்கிறார்கள். இதற்கு விஜய் எந்த பதிலும் சொல்லவில்லை. அதேநேரம் அவரது ஆதரவாளர்கள், ‘’நாம் தமிழர் என்பதே ஒரு மூடர் கூடம். சீமான் இங்கீதம் இல்லாத அறிவில்லாத தற்குறி. அதன் வெளிப்பாடே கூமுட்டை கொள்கை என்பதும், லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் என்பதும். சமூக அறிவில்லாத சீமான் இனியும் இதைவிட மட்டமாக பேசுவார். அதற்கான தேவை அவருக்கு இருக்கிறது. ஏனென்றால் விஜய்யால் நான்காம் ஐந்தாம் இடத்திற்கு அவர் கட்சி தள்ளப்படுவார்.

தற்குறி சீமானிற்கு 30 லட்சம் ஓட்டு மட்டுமே விழுந்திருகிறது. ஆனால் ஒரு தேர்தலை கூட சந்திக்காத நம் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை மட்டும் 60 லட்சம். 60 லட்சம் உறுப்பினர் + உறுப்பினர் அல்லாத மக்கள் எத்தனை எத்தனை லட்சம் ஓட்டுகள் நமக்கு 2026-ல் விழும் என்பதை எண்ணி பாருங்கள்.’’ என்று சவால் விடுகிறார்கள். அதோடு மூடர்கூடம் சீமானை வைரல் ஆக்குகிறார்கள்.

இவர்களை மோதவிட்டு திராவிடமும் தேசியமும் குளிர் காய்கிறது.

Leave a Comment