மீண்டும் தம்பிகளுடன் மோதும் த.வெ.க.
எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கொடுத்த நினைவுச் சின்னம் அ.தி.மு.க.வின் முக்கியமான அரசியல் நிகழ்வாக கருதப்படும். இன்றும் அந்த புகைப்படம் அவ்வப்போது பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதில் எம்.ஜி.ஆருக்குப் பதிலாக விஜய்யையும் ஜெயலலிதாவுக்குப் பதிலாக கீர்த்தி சுரேஷ் படத்தையும் போட்டு வைரல் ஆக்கி வருகிறார்கள் நாம் தமிழர் தம்பிகள் என்று குற்றம் சாட்டும் விஜய் ரசிகர்கள், பதிலுக்கு விஜயலட்சுமியை கையில் எடுக்கிறார்கள்.
நாம் தமிழர்களை கண்டுகொள்ள வேண்டாம் என்று தெரிவித்த பிறகும் ஆத்திரம் விலகாமல் நாம் தமிழர்களை துவைத்துக் காயப்போடுகிறார்கள் விஜய் ரசிகர்கள். இது குறித்துப் பேசுபவர்கள், ‘’குடும்பத்தையே கட்சிக்குள் கொண்டுவரக் கூடாது என்று தெளிவாக இருக்கிறார் விஜய். ஆனால், தம்பிகள் வேண்டுமென்றே கீர்த்தி சுரேஷுடன் இணைத்துப் பேசி வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறார்கள். எங்கள்மாநாடு முடிந்து 5 நாட்களுக்குப்பின் யோசிச்சு வந்து திடீர்ன்னு இவங்க பொங்கிட்டு இருப்பதற்கு என்ன காரணம் என்பதை சீமான் தெளிவுபடுத்த வேண்டும்.
மக்கள் விரோத ஆட்சியான திமுகவை அப்புறப்படுத்தும் வேலையில் எங்களுடன் தம்பிகள் நிற்க வேண்டும். ஆனால், முதல் நான்குநாட்கள் புகழ்ந்து பேசியவர்கள் அதன்பிறகு கடிக்கிறார்கள் என்றால் ஆளும் கட்சியின் தாளத்துக்கு ஆடுகிறார்கள் என்பதே அர்த்தம்.
உங்க விருப்பு வெறுப்புக்கெல்லாம் தவெகவை தலைவர் விஜய் தொடங்கவில்லை. தமிழக மக்களுக்கு வேலை செய்வதும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்வதும், சமத்துவ சமூகநீதியை நலைநாட்டுவதுமே தவெகவின் தலையாய கடமை. இந்த இலக்கை நோக்கி மட்டுமே தவெக பயணிக்கும். இப்படி தேவையில்லாத வேலைகளில் தலையிட்டால் மீண்டும் விஜயலட்சுமியை பேச வைக்க வேண்டியிருக்கும்’’ என்று எச்சரிக்கை செய்கிறாகள்.
இப்படி கீர்த்தி சுரேஷுக்கும் விஜயலட்சுமிக்கும் போட்டி வைக்கிறாங்களே