நொச்சி செடி வழங்குவதற்கு ஜெயலலிதா உத்தரவு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 88

இயற்கை மருத்துவம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் மேயர் சைதை துரைசாமி, நொச்சி செடியின் மருத்துவப் பயன்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். பெருநகர சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுக்க நொச்சி செடி வளர்ப்பை பெரும் இயக்கமாக நடத்த வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

ஆகவே, நொச்சி செடியின் மூலம் கொசுவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, மக்களின் உடல் ஆரோக்கியத்திற்குமான பலன்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் விளக்கமாகப் பேசினார். நொச்சி செடி வளர்ப்பை ஒர் திட்டமாக விரிவாக செயல்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்கி முதல்வரிடம் ஒப்படைத்தார்.

அதனை பார்த்தவுடன் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி அடைந்து சைதை துரைசாமியை பாராட்டியது மட்டுமின்றி, உடனடியாக இதனை  தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த உத்தரவு போட்டார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், நொச்சி செடிகள் வளர்க்கப்பட்டு, கிராமப்புறங்களில் உள்ள 40 லட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு உத்தரவு போட்டார். இந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முதல் கட்டமாக சுமார் 5 லட்சம் நொச்சி செடிகள் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த எண்ணிக்கை போதாது என்பதால், சென்னை மாநகராட்சியில் நொச்சி செடி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கு பொதுநலச் சங்கங்களைப் பயன்படுத்திக்கொண்டார் மேயர் சைதை துரைசாமி. அவர்களுடைய பங்களிப்பு காரணமாக நகர் முழுவதும் நொச்சி செடி பல்வேறு இடங்களிலும் இலவசமாக வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு இதன் பயன்கள் எடுத்துக்கூறப்பட்டு வீட்டுக்கு வீடு நொச்சி செடி வளர்ப்பதற்கான விழிப்புணர்வும் உருவாக்கப்பட்டது.

இன்று சென்னை மாநகரில் ஏராளமான இடங்களில் நொச்சி செடி இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் மேயர் சைதை துரைசாமியின் முழு முயற்சியே காரணம். இந்த நேரத்தில் நொச்சி செடியின் நன்மைகள் குறித்து நிறைய பேர் அறியாமையில் இருந்தார்கள். அவர்களுக்கும் நொச்சியின் பயன்கள் குறித்து பொதுநலச் சங்கங்கள் மூலம் விளக்கம் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.

  • நாளை பார்க்கலாம்.

.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்