ஜக்கி வாசுதேவ் தாய்ப்பால் ஆராய்ச்சி

Image

நோபல் பரிசு கிடைக்குமா?

ஊர், உலகத்துக்கு எல்லாம் இயற்கை வைத்தியம், யோகா சிகிச்சை என்று வழி காட்டும் ஜக்கி வாசுதேவ் அவருக்கு ஒரு பிரச்னை என்றால் மட்டும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வார். தன்னுடைய சீடர்களை எல்லாம் மொட்டையடித்து சந்நியாசி ஆக்கும் ஜக்கி மகளுக்கு மட்டும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பார்.

இவர் மீது விசாரணை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு தயங்கி நிற்கிறது. இப்போது அவர் பேசிய ஒரு வீடியோ வைரல் வீடியாவாக மாறியிருக்கிறது. அந்த வீடியோவில், ‘’குழந்தை பெறும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் சுரப்பதில் வித்தியாசம் உண்டு. ஆண் குழந்தை என்றால் ஒரு விதமாகவும், பெண் குழந்தையாக இருந்தால் ஒரு விதமாகவும் இருக்கும்.

அதுவே ட்வின்ஸ் என்ரால் அதாவது ஒரு ஆண், ஒரு பெண் என்றால், ஒரு மார்பகத்தில் ஆண் பிள்ளைக்குப் பாலும் இன்னொரு மார்பகத்தில் பெண் பிள்ளைக்குப் பாலும் சுரக்குமாம். இயற்கை கொடுக்கும் கொடையைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார்.

தாய்ப்பால் குறித்து இத்தனை தெளிவாக விளக்கம் கொடுக்கிறார் என்றால், தனி சுடுகாடு மாதிரி தாய்ப்பால் ஆராய்ச்சி மையமும் ஈஷா யோகா மையத்தில் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, இதைக் கண்டறிந்து நோபல் பரிசு குழுவினருக்குத் தெரிவித்தால் அவர்கள் பரிசு கொடுக்க முன்வரலாம்.

மோடி நினைத்தால் இதுவும் சாத்தியமே.

Leave a Comment