• Home
  • சர்ச்சை
  • ரத்தச் சகதியில் பாலஸ்தீனக் குழந்தைகள்

ரத்தச் சகதியில் பாலஸ்தீனக் குழந்தைகள்

Image
  • கண்ணீரில் ஆல் ஐஸ் ஆன் ரஃபா டிரெண்டிங்

இன்று உலக அளவில் “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகிவருகிறது. ரத்தத்தில் மிதக்கும் குழந்தைகள் மற்றும் தீப்பற்றி எரியும் ரஃபா நகரமும் பார்ப்பவர் நெஞ்சத்தை கலங்க வைக்கிறது.

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதையடுத்து, ரஃபா தற்காலிக முகாம் மீது செவ்வாயன்று மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 37 பாலஸ்தீர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையைக் குறிக்கும் வகையில், “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” என்ற ஹேஷ்டேக் உடன் பாலஸ்தீன மக்கள் குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மெக்சிகோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் பேரணி நடத்தியதால் மோதல் ஏற்பட்டது. போலீஸார் இதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 36,096 -க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 81,136 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது. பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதரை மனிதர் கொல்லும் போர்க் கலாச்சாரத்துக்கு முடிவு எப்போ வருமோ..?