• Home
  • மனம்
  • உங்கள் துன்பம் இதைவிட பெரிதா..?

உங்கள் துன்பம் இதைவிட பெரிதா..?

Image

அதிரவைக்கும் உண்மை

துன்பம், துயரத்தை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வேதனை புரியும் என்கிறார்கள். உண்மை தான். ஆனால், நீங்கள் அனுபவிக்கும் வேதனை போன்று அல்லது அதைவிட அதிகமாகவே உலகில் பலரும் அனுபவிக்கிறார்கள். உங்களுக்கு மட்டுமே மிகப்பெரிய சோதனை, வேதனை என்பது உண்மையல்ல. அதுவும் உலகில் எந்த மனிதரின் வலியும் வேதனையும் ஒரு பெண்ணின் பிரசவ வலிக்கு இணையானது இல்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு பெண்ணும் வலி தாங்கும் சுமைதாங்கி.

கணவனுக்கு அல்லது பிள்ளைக்கு உடலில் வலி, நோய் என்றால் பெண் துடித்துப் போவாள். அதேநேரம் அவள் உடலில் இருக்கும் வேதனையை வெளியே காட்ட மாட்டாள். குறிப்பாக மாதவிலக்கு போன்ற நேரங்களில் திடுமென எழும் வயிற்று வலியை கொஞ்சமும் முகத்தில் காட்ட மாட்டாள்.

இன்றைய பெண்கள் முழுநேர மணிக்கு சென்று வந்த பிறகும், ஓய்வு எடுக்காமல், களைப்பை கொஞ்சமும் வெளியே காட்டாமல் வீட்டு வேலைகளை செய்யத் தொடங்குகிறார்கள். பிள்ளைகள், கணவனை கவனிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவளுடைய கவனம் இருக்குமே தவிர, தங்கள் உடல் வேதனையில் அல்ல.

பெண்ணின் கர்ப்ப கால அவஸ்தைகள் எப்படிப்பட்டது என்று தெரியுமா.?

விரும்பிய உணவுகளை வாயிலே வைக்க முடியாது. ஏனென்றால் முதல் நாலைந்து மாதங்கள் வாந்தி, மயக்கம் என்று கிறங்கடித்துவிடும். அதன்பிறகு, குழந்தையின் நலனுக்குத் தேவையான உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்களே தவிர, தங்களுக்கு விருப்பமானதை தொடர மாட்டார்கள்.

வயிறு பெரிதாக வளர… வளர…  அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய தொந்தரவு உண்டாகும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு எழும்போதும் மிகப்பெரிய ஆயாசம் உண்டாகும்.

நிம்மதியாக புரண்டு படுக்கவும், தூங்கவும் முடியாது. இப்படி படுத்தால் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று அச்சப்பட்டு அவ்வப்போது எழுந்துவிடுவாள். வயிற்றின் மேல் கையை வைத்து, குழந்தைக்கு அசைவு இருக்கிறதா என்று கவனித்துக்கொண்டே இருப்பாள். ஒருசில மணி நேரம் குழந்தையிடம் நகர்வு இல்லை என்றாலே பயந்துவிடுவாள்.

இவற்றை எல்லாம் தாண்டியும், பிரசவ வலியை தாங்குவதற்குத் தயாராக இருப்பாள். ஏனென்றால், இயற்கை பிரசவம் மூலம் பிறப்பதே குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதால் முடிந்த வரையிலும் சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வாள். பிரசவ வலியை Queen of Pain என்று அதாவது, வலிகளின் ராணி என்பார்கள். அதனை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வாள்.

பிரசவ வலி வரும்போது மருத்துவமனை அறை ஒரு போர்க்களம் போன்று காட்சி அளிக்கும். வலி தாங்க முடியாமல் கெட்ட வார்த்தைகளால் பக்கத்தில் நிற்கும் நர்ஸ்களை, டாக்டர்களை, அம்மாவை, கணவனை எல்லாம் திட்டுவாள். அதோடு, ஒவ்வொரு பெண்ணும் பிரசவ நேரத்தில் சபதம் எடுப்பாள்.

‘இனிமே அவனை என் பக்கத்திலே படுக்க விட மாட்டேன்” என்று கணவனை திட்டுவாள். இதுபோல் பல பெண்களை நர்ஸ்கள் பார்த்திருப்பதால் லேசாக புன்னகைப்பார்கள். உடனே அவளுக்கு கோபம் உச்சிமண்டைக்கு ஏறிவிடும்.

‘நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை  நிஜமாகவே இனிமேல் என் கணவனை என் பக்கத்திலே நிற்கவே விடமாட்டேன்’ என்று சொல்வாள். எத்தனை வலித்தாலும், திட்டிக்கொண்டே ஏற்பாளே தவிர, சிசேரியனுக்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டாள்.

ஒரு வழியாக உச்சபட்ச வலியை உணர்வாள். பொதுவாக, வலியின் அளவு ‘டெல்’ என்று குறிக்கப்படுகிறது. ஒரு மனிதனால் அதிகபட்சமாக 45 டெல் அளவுக்கு வலியை தாங்க முடியும் என்பார்கள் ஆனால், ஒவ்வொரு பெண்ணும் தன் பிரசவத்தின்போது 57 டெல் வலியைக் கடக்கிறாள். இது, நம் உடலில் 20 எலும்புகள் ஒரே நேரத்தில் ஒருசேர உடையும்போது ஏற்படும் வலிக்கு இணையானது. இத்தனை சிரமப்பட்டு குழந்தை வயிற்றில் இருந்து வெளியே வந்ததும், அதை கண்ணால் பார்த்தவுடன், அதுவரை அவள் அனுபவித்த அத்தனை வலிகளும், வேதனைகளும் மறைந்துவிடும்.

குழந்தையை மார்பில் அணைத்துக்கொண்டதும், அடுத்த கணம் கணவனைத் தேடுவாள். அதுதான் பெண் மனம். இத்தனை பெரிய துன்பத்தை தாங்கும் பெண்ணின் பிரசவ வலியை விடவா… மனிதருக்கு வரும் துன்பமும் வலியும் பெரிது..?

Leave a Comment