மோடியின் கைப்பாவையா திருமாவளவன்.?

Image

ராகுலுக்கு எதிராக அதிர்ச்சி முடிவு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் சமீபத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரது கட்சியினருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துவருகிறது. இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஆதவ் அர்ஜூனா நடத்துவதாக சொல்லப்படும் நிலையில், மகாராஷ்டிராவில் மோடிக்கு ஆதரவாக திருமாவளவன் எடுத்திருக்கும் முடிவு அனைத்துக் கட்சியினரையும் புருவம் தூக்க வைத்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக சிவசேனா கட்சியை உடைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியில் அமர்ந்து மக்களை சொல்ல முடியாத துன்பங்களுக்கு பாஜக கூட்டணி ஆளாக்கிவிட்டது. இப்போது தேர்தல் நடக்கப் போகும் சமயத்தில் ஏராளமான கவர்ச்சி திட்டங்களை அறிவித்துவருகிறது. அதோடு, அங்குள்ள காங்கிரஸ், சிவசேனா, சரத்பவார் கட்சிக் கூட்டணிக்கு எதிராக சின்னச்சின்ன கட்சிகளை களம் இறக்குகிறது.

அந்த வகையில் நவம்பர் 20ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது என்று திருமாவளவன் அறிவித்திருக்கிறார். இதற்காக அவுரங்காபாத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் அறிவிக்கிறார்.

ஒரே கட்சி என்று வைத்துக்கொண்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு முடிவெடுக்கும் திருமாவளவன் இப்போது மராட்டிய மண்ணில் ராகுல் காந்திக்கு எதிராக களத்தில் நின்று சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்க இருக்கிறார். இது மோடி போட்டுகொடுத்த பிளான் என்கிறார்கள். மராட்டியத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெரிய செல்வாக்கு இல்லை என்றாலும் பட்டியலின மக்களின் வாக்குகளைக் கொஞ்சமாகப் பிரித்தாலே போதும் என்பது பா.ஜ.க.வின் பிளான்.

இந்த தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘’நாம் இந்திய கூட்டணி சார்பில் நிற்கிறோமா அல்லது தனித்து நிற்கிறோமா தனித்து நின்றால் அங்கு பிஜேபி வெல்வதற்கு சாதகமாக அமைந்து விடும்… வேண்டாம்’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

கர்நாடக விடுதலை சிறுத்தைகள் தமிழகத்துக்கு எதிராக புதிய அணை கட்டுவதற்கு குரல் கொடுத்தது போன்று மகாராஷ்டிராவில் போய் ராகுல்காந்திக்கு எதிராக் குரல் கொடுக்கப் போகிறார் திருமாவளவன்.

உருப்பட்டா மாதிரி தான்.

Leave a Comment