நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
- சிவவாக்கியர்.
இது தானுங்க அர்த்தம்.
சமைக்கும் உணவின் சுவையும் பாத்திரமும் கரண்டியும் அறிந்துகொள்ளாது. அதுபோல், பரம்பொருள் உன் மனதுக்குள் இருக்கும்போது, அதைவிட்டு, சிற்பியினால் வடிக்கப்பட்ட கல்லை பரம்பொருள் என்று நம்பலாமா? அதற்கு மலர்கள் சூடுவதாலும், மந்திரம் சொல்வதாலும், அந்த கல் பேசுமா..?