இதுக்கும் சிபிஐ விசாரணை
கள்ளச்சாராயம் பற்றிய மசோதா தாக்கல் செய்யப்படுகிற அன்று அதிகாலையே உடுமலைப்பேட்டை அருகே 5 பேர் கள்ள சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை மறைக்க ’சாராயத்தில் மிக்ஸிங் செய்த தண்ணீர் சரியில்லை என்று கூறுகிறார்கள் என்று கே.சி.பழனிசாமி ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
அவர் மேலும், ‘’கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய மரணம் ஏற்பட்ட பொழுதே தமிழகம் முழுவதும் உள்ள கள்ளச்சாராயம் வியாபாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு மற்ற இடங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வளவு பெரிய துயர சம்பவத்திற்கு பிறகு மீண்டும் கள்ளச்சடைய வியாபாரம் நடைபெற்று உள்ளது. ஆனால் பாதிப்பு ஏற்பட்டது கள்ளச்சராயத்தால் அல்ல மிக்ஸிங் செய்த தண்ணீரால் என்று மாற்றத்தான் முயற்சிக்கிறார்களே தவிர கள்ளச்சாரத்தை தடுக்க தவறி விட்டோம் என்று அரசாங்கம் உணர்ந்ததாக தெரியவில்லை.
மீண்டும் ஒரு கள்ளச்சாராய வியாபாரம் நடந்திருக்கிறது என்றால் அதற்கு இந்த அரசாங்கம் தார்மீக பொறுப்பு ஏற்கப் போவதில்லையா? “எதை மறைத்தோம் சிபிஐ விசாரணை கோர” என்ற முதல்வர் கேட்டார்.
உடுமலைப்பேட்டையில் 5 பேருக்கு கள்ளச்சாராயத்தால் பாதிப்பா அல்லது தண்ணீரால் பாதிப்பு என்று மறைக்க முயற்சிக்கிறீர்களே. இது ஏன் சி.பி.ஐ விசாரணைக்கு போகக்கூடாது. இது மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து கள்ளச்சாராய வழக்குகளும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிககள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை சி.பி.ஐ இறங்கி செய்ய வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.