• Home
  • தமிழ் லீடர்
  • சீமான் – காளியம்மாள் பஞ்சாயத்து இன்னமும் முடியலையா..?

சீமான் – காளியம்மாள் பஞ்சாயத்து இன்னமும் முடியலையா..?

Image

தொடரும் பிசிறு மோதல்

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளர் காளியம்மாளின் பிறந்த நாளுக்கு சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் கடுமையான விமர்சனத்துக்குப் பிறகு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருப்பதை அடுத்து, இன்னமும் பிசிறு பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை என்றே சொல்லப்படுகிறது.

காளியம்மாளை பிசிறு என்று சீமான் பேசிய ஆடியோ விவகாரம் படு வைரலானது. இது உண்மையாக இருக்காது என்றே நாம் தமிழர் தம்பிகள் நினைத்தார்கள். ஆனால், அது உண்மையே என்பது போன்று சாட்டை துரைமுருகன், அந்த ஆடியோ வெளியானதற்கு மட்டும் கண்டனம் தெரிவித்தார்.

அடுத்து மேடையில் பேசிய சீமானும், ‘உசுறு என்பேன் நானே மசுறு என்பேன். அதனால் உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்று பேசியதைக் கேட்டு கட்சி நிர்வாகிகளும் தம்பிகளும் ;அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு சீமானும் காளியம்மாளும் சந்திக்கவே இல்லை. சமீபத்தில் நாம் தமிழர் பிரமாண்டமாக நடத்திய பழங்குடியினர் பாதுகாப்பு மேடையிலும் சென்னையில் நடந்த சீமான் கூட்டத்திலும் காளியம்மாள் கலந்து கொள்ளவில்லை

இந்த நிலையில் நேற்று காலை முதல் காளியம்மாள் பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வந்தனர். ஆனால், சீமான் கூறவில்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தி.மு.க. உடன்பிறப்புகள் கிண்டல் செய்தார்கள். இந்த கிண்டலும் கேலியும் அதிகரித்த பிறகே சீமான் ஒரு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தியும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

இதன் பிறகும் காளியம்மாள் பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது. காளியம்மாளை இனி கட்சிக்குள் சேர்ப்பது தேவையில்லாத முக்கியத்துவம் கொடுப்பதாக மாறிவிடும் என்றும் காளியம்மாள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர இருப்பதாகவும் நாம் தமிழர் தம்பிகளே இப்போது செய்தி பரப்பிவருகிறார்கள்.

திராவிடக் கட்சிகளை விட மோசமான அரசியலா இருக்குதே…

Leave a Comment