• Home
  • அரசியல்
  • சூரியனைப் பார்த்து சசிகலா குலைக்கிறாரா..?

சூரியனைப் பார்த்து சசிகலா குலைக்கிறாரா..?

Image

வில்லங்கமாகும் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மெகா கூட்டணி என்று பேசிக்கொண்டே இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் இப்போது விஜய்காந்த் கட்சி மட்டுமே இருக்கிறது. அவர்களும் வரும் தேர்தலில் பா.ஜ.க. அணியில் ஐக்கியமாவார்கள் என்றே தெரிகிறது. இந்த நிலையில் ஒருங்கிணைப்புக்கும் கடுமையாக எதிர்ப்பு காட்டி வருகிறார். இந்த விஷயத்தில் சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சசிகலா இப்போதும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்று இயங்கிவருகிறாரே என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘’அவங்க என்ன செஞ்சாலும் எங்களுக்கு என்ன… சூரியனைப் பார்த்து…. இதுக்கு மேல சொன்னா நல்லா இருக்காது’’ என்று கடுமையாக சாடியிருக்கிறார். அவருக்குப் பதவி கொடுத்தவரையே நாய் என்று சொல்வது என்ன வகையான விசுவாசம் என்று அவரது கட்சியினரே வருத்தமாகிறார்கள்.

இந்த நிலையில் ஒருங்கிணைப்புக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் கே.சி.பழனிசாமி, ‘’எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வெற்றிக்கான வியூகம் என்ன? திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று நினைத்தார் அது நிறைவேறவில்லை, பாஜக கூட்டணியும் பிளவு இல்லாமல் சுமுகமாக பயணிக்கிறது. மீதமுள்ளது நாம் தமிழர் கட்சி மற்றும் த.வே.க-வும் தான் எனவே இவர்களில் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்?

 வெற்றிக்கான வியூகம் என்ன என்பது தெரிவிக்காமல் இருக்கிறார். மாறாக கட்சியை ஒன்றிணைக்காமல் இருக்கிற வாய்ப்புகளையும் குறைத்துக்கொள்கிறார். * சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறைக்கு செல்லுகிற வரை ஒரு கழக குரல் எழவில்லை. ஆனால் அதே சசிகலா சிறை சென்றதும் அவரை கட்சியை விட்டு நீக்கினார்கள். இப்படி இருந்தால் கட்சி எப்படி உருப்படும்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எடப்பாடியின் பேச்சைக் கேட்டு சசிகலா கொதித்துப் போயிருக்கிறார். ஆனால், எதுவும் செய்யமுடியாதே என்று அமைதி காக்கிறார்.

Leave a Comment