என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 11
பொதுவாக மேயர் பதவியை அலங்காரப் பதவியாகவே அரசியல்வாதிகள் கருதுவார்கள். எனவே, இந்த பதவிக்கு வருபவர்கள் பகுதி நேரம்தான் மேயர் பணியில் ஈடுபடுவார்கள்.
எல்லா மேயர்களும் பதவி ஏற்ற சில நாட்கள் ஆரம்ப ஜோரில் அதிரடியாக முழங்குவார்கள், பல்வேறு உத்தரவு போடுவார்கள். அதன்பிறகு தாங்கள் பேசியதை காற்றில் பறக்கவிட்டு, தங்கள் சொந்த வேலையை கவனிக்கச் சென்றுவிடுவார்கள். அதன்பிறகு பொதுமக்களிடம் மனு வாங்கும் தினம், மாநகராட்சிக் கூட்டம் நடக்கும் நாட்களில் மட்டும்தான் அவர்களை மாநகராட்சியில் பார்க்க முடியும். அப்படி மாநகராட்சிக்கு வந்தாலும் அதிகபட்சமாக ஒன்றிரண்டு மணி நேரம்தான் செயல்படுவார்கள். மற்ற நேரங்களில் எல்லாம் அதிகாரிகள் ஆட்சியே நடக்கும். எனவே, வழக்கமான டம்மி மேயராகவே சைதை துரைசாமியும் இருப்பார் என்று நினைத்தார்கள்.
சைதை துரைசாமியும் அவர்களில் ஒருவர் என்று தான் நினைத்தார்கள். எனவே, பொதுமக்களிடம் புகார் மனுவை வாங்கிக்கொண்ட ஊழியர்கள், அதனை வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டார்களே தவிர, அவற்றை பதிவு செய்யவில்லை. எனென்றால் அடுத்த நாள் அவர் வரமாட்டார், அப்படியே வந்தாலும் புகார் மனுக்கள் பற்றி எல்லாம் எதுவும் கேட்க மாட்டார். அப்படியே கேட்டாலும், வேலை நடக்கிறது என்று சொல்லிவிட்டால் போதும் என்று நினைத்தார்கள்.
ஆனால் அடுத்த நாளும் சைதை துரைசாமி மாநகராட்சிக்கு வந்து நின்றார். அதுவும் ஊழியர்கள், அதிகாரிகள் வருவதற்கு முன்னதாகவே வந்துவிட்டார். அது மட்டுமின்றி, அன்றைய தினமும் அங்கு வந்த பொதுமக்களிடம் என்ன பிரச்னை என்று கேட்டு அவர்கள் கையில் இருந்த புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அந்த புகார் மனுக்களுடன் அதிகாரிகளை சந்தித்தவர், ‘’நேற்று கொடுத்த புகார் மனுக்கள் எத்தனை, அவை எல்லாம் பதிவு செய்யப்பட்ட விபரத்தையும் மேற்கொண்டு அதில் நீங்கள் எடுத்த நடவடிக்கைக்கான ஆதாரங்களையும் கொண்டுவாருங்கள்..’’ என்று உத்தரவு போட்டார்.
நல்லவேளையாக மனுக்கள் பத்திரமாக இருந்தன. அவற்றை மட்டுமே கொண்டுவந்தார்கள். இன்னமும் பதிவு செய்யவில்லை என்றும் சொன்னார்கள்.
அதற்கு சைதை துரைசாமி என்ன செய்தார்..?
- நாளை பார்க்கலாம்