• Home
  • காமம்
  • 63 பாலியல் நிலைகளையும் அனுபவிக்க முடியுமா..?

63 பாலியல் நிலைகளையும் அனுபவிக்க முடியுமா..?

Image

பாலியல் கப்ஸா கற்பனைகள்

மனிதகுலம் தொடங்கி லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆன பிறகும் பாலியல் குழப்பம் மக்களுக்குத் தீரவில்லை. செல்போனில் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் வகையில் எளிதான தொழில்நுட்பங்கள் இருக்கும்போதும், பாலியல் கட்டுக்கதைகளுக்குள் மூழ்கிக் கிடக்கிறார்கள். பெரும்பாலான மனிதர்களை ஆட்டிப் படைக்கும் பாலியல் சந்தேகங்களுக்கு விடைகளைப் பார்க்கலாம்.

ஆண்களுக்கே அதிக இன்பம் என்பது உண்மையா..?

படுக்கையறையில் ஆண்களுக்கே அதிக இன்பம் கிடைக்கிறது என்ற எண்ணம் பொதுவாக இருக்கிறது. உண்மை என்னவென்றால் ஆண்களுக்கு குறுகிய நேரமே பாலியல் இன்பம் கிடைக்கிறது. பெண்கள் பாலியல் இன்பத்தை நீண்ட நேரம் அனுபவிக்கிறார்கள். ஆண்கள் அவசரப்பட்டு தங்கள் ஆசையைத் தணித்துக் கொள்கிறார்கள். பெண்கள் நிதானமாக தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். எனவே, ஆண்கள் செயல்படாமல் பெண்களை செயல்பட வைத்தால், அவர்களுக்கும் கூடுதல் நேரம் இன்பம் கிடைக்கும்.

63 பாலியல் நிலைகளையும் அனுபவிக்க முடியுமா?

பாலியல் புத்தகங்களில் 63 நிலைகள் உள்ளன. அத்தனையையும் தம்பதியர் அனுபவிக்க வேண்டும் என்று சிலர் விரும்புவதுண்டு. இது, முழுக்க முழுக்க இரண்டு பேரின் சம்மதம் தொடர்பானது. பாலியல் ஆசைகளில் வெட்கப்படுவதற்கு அவசியம் இல்லை. உண்மையில், அது புனிதமானது. பாலியல் தூண்டுதல் என்பது அவமானம் அல்ல. எனவே இதில் சங்கடம் மற்றும் குற்ற உணர்வு தேவையில்லை. அதேநேரம், வன்முறை, ஆக்கிரமிப்பு, ஆளுமை போன்றவைகளுக்கு படுக்கையறையில் இடமில்லை. இங்கு வரும் பிரச்னைகளே குடும்பப் பிரச்னைகளாக வெடிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு முறை போதுமா..?

பாலியல் ஆசையை ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே தீர்க்க வேண்டும், அதிகம் ஆசைப்படுவது உடலுக்குச் சிக்கலாகிவிடும். அதோடு, பாலியல் வெறியராக மாற்றிவிடும் என்று சொல்லப்படுவதுண்டு. உண்மையில், ஒரே ஒரு முறை பாலியல் இன்பம் அனுபவிப்பதே போதுமானது. ஆனால், அந்த ஒரு முறை என்பது முழுமையாக இருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் போதிய திருப்தி கிடைக்க வேண்டும். அப்படி இன்பம் கிடைக்காத பட்சத்தில் இரண்டாவது, முறை மூன்றாவது முறை முயற்சி செய்யலாம்.

பாலியலுக்கு இருட்டு முக்கியமா..?

பாலியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இருட்டு அவசியம் என்ற எண்ணம் பெண்களிடம் அதிகம் இருக்கிறது. உண்மையில் முகம் பார்த்து காதலுடன் பாலுறவில் ஈடுபடுவதே அதிக இன்பம் தருவதாக இருக்கிறது. இருட்டில் இன்பம் அனுபவிப்பது இருட்டில் உணவு சாப்பிடுவது போன்ற அனுபவமாகவே இருக்கும். வெளிச்சத்தில் நிதானமாக ரசித்து இன்பம் அடைவதே பாலியலுக்கு நல்லது. இந்த உறவு பகலிலும் தொடர வழி செய்கிறது. அதோடு, தம்பதியரை மிகவும் நெருக்கமாக்கிவிடும்.

Leave a Comment