• Home
  • சர்ச்சை
  • கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்குப் போறது சம்பிரதாயம் இல்லையா விஜய்.?

கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்குப் போறது சம்பிரதாயம் இல்லையா விஜய்.?

Image

தாலிலியுடன் பனையூருக்கு வரச்சொல்லுங்க புரோ

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதில் சீமானை ஓவர்டேக் செய்து படு வேகத்தில் போய்க்கொண்டு இருக்கிறார் நடிகர் விஜய். மாநாட்டு மேடையில் அவர்களே, இவர்களே என்று எல்லோரையும் தனித்தனியே சொல்வது எனக்குப் பிடிக்காது என்றார். ஆனால், புத்தக வெளியீட்டு விழாவில் அப்படித்தான் நேரடியாக ஒவ்வொருவரையும் அழைத்தார்.

அதேபோல் கடலூர் மழை வெள்ளம் பாதிப்பு வந்த நேரத்தில், ‘வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து ஆறுதல் சொல்வது, போட்டோ பிடிப்பது போன்ற சம்பிரதாயங்கள் பிடிக்காது’ என்றார். அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலரை நேரடியாகப் பனையூருக்கு வரவழைத்து உதவிகள் செய்தார்.

இந்த நிலையில் அவர் கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்காக கோவாவுக்கு நேரடியாகப் போயிருக்கிறார் நடிகர் விஜய். இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் படு வைரலாகி வருகிறது.

அதாவது, மழை பொழிந்தால் சாலையில் போய் மக்களை சந்திப்பது வீண் என்று சொல்வதும் நடிகையின் கல்யாணத்திற்கு போய் போஸ் கொடுப்பது மட்டும் எப்படி சரியாக இருக்கும். நீங்க போன நெரிசல் தள்ளுமுள்ளு சொன்னா அது நியாயம் ஆனா மக்களை சந்திப்பது வேலை இல்லாத ஒன்று சொல்வது மக்களை கேவலப்படுத்துவதற்கு சமம் என்று பொங்குகிறார்கள்.

நீங்க இதைப் பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க பாஸ், ஒரு குத்துப்பாட்டு ஆடிட்டு வாங்க.

Leave a Comment