வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 800 நாட்களைக் கடந்தும் நடந்து வருகிறது. இந்தப் போரில் இருதரப்பிலும் ஆயிரக்ணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பலகோடி மதிப்பிலான பொருள்கள் நாசம் அடைந்துள்ளன. இந்த போருக்கு இந்தியாவும் ஆயுதங்கள் அனுப்பியிருப்பதாக வரும் தகவல் உலக அளவில் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நேரடியாகவே செய்துவருகின்றன. அதனாலே உக்ரைன் ரஷ்யாவின் கடும் தாக்குதலை சமாளித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன. பாரதப்பிரதமர் மோடியும் சமீபத்தில் உக்ரைன் அதிபரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அஜித் தோவல் நேரடியாக ரஷ்யாவுக்குச் சென்று சமாதானம் பேசி வந்தார். இந்த நிலையில் இந்திய நிறுவனங்களிடம் இருந்து இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள்வாங்கும் பீரங்கிகள், வெடிமருந்துகள் உக்ரைனுக்குத் திருப்பி விடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்திற்காகவே ரஷ்யா தன்னுடைய எதிர்ப்பை இந்தியாவுக்குப் பதிவு செய்தது. ஆனாலும், இந்தியா இந்த வர்த்தகத்தை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக ஆயுதப் பரிமாற்றம் ஓராண்டுக்கு மேலாக நிகழ்ந்து வருவதாக சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி Reuters கூறுகிறது உக்ரைனுக்கு இந்திய ராணுவப் பொருட்களை அனுப்பும் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு ஆகியவை அடங்கும் எனவும் கூறியுள்ளது
இந்தியா அரசுக்கு சொந்ததமான ‘இயந்திரா’ நிறுவனம் உற்பத்தி செய்யும் வெடிமருந்துகளை உக்ரைன் பயன்படுத்துவதாக Reuters விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ள செய்தி பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தில் பாதிப்பு உண்டாகலாம், பொருளாதாரத்தடையையும் சந்திக்க நேரலாம் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.