உதயநிதிக்கு கார் பந்தயம் ஒரு கேடா..?

Image

நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை, தரமான பேருந்துகள் இல்லை, அரசு மருத்துவமனை நிலை மிகக் கொடுமை, சென்னை வடிகால் பணிகள் பல ஆயிரம் கோடியை தாண்டி இன்னமும் முடியவில்லை, கஞ்சா, போதை மருந்து என எதையும் கட்டுப்படுத்த முடியாத சூழலில் கார் பந்தயம் நடத்தப்படுவது அவசியமா என்று கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, ‘கார் பந்தயம் ஒரு கேடா’ என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகிவருகிறது.

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் இம்மாதம் நடைபெற உள்ளது. இந்த பந்தயத்துக்காக அடாவடி வசூல் செய்யப்படுவதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே ஒரு புகார் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் இந்த ரேஸ் கார் பந்தயம் விதிமுறை மீறி நடத்தப்படுகிறது என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு தொடுத்துள்ளது. இதனை அவசர வழக்காக பட்டியலிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் நடக்க இருக்கும் கார் பந்தயத்துக்கு அவசரம் அவசரமாக டிக்கெட் விற்பனை நடக்கிறது. நிறைய பேரிடம் விற்பனை செய்துவிட்டால், அதன் பிறகு நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாது என்பதாலே இதில் அவசரம் காட்டப்படுவதாக சொல்லப்படுகிறது.

நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்குமா?

Leave a Comment