• Home
  • பணம்
  • தினமும் 24 லட்சம் ரூபாய் போதுமா..?

தினமும் 24 லட்சம் ரூபாய் போதுமா..?

Image

மணி மேனேஜ்மென்ட்

மாலை நேரத்தில் ஆற்றின் கரையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க வந்த மகேந்திரன், ‘’டயம் மேனேஜ்மென்ட்ன்னு சொல்றாங்க, நேரத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எப்படி? நேரத்தைக் கட்டுப்படுத்தினால் பணம் வருமா?’’ என்று கேட்டார்.

’’தினமும் 24 லட்சம் ரூபாய் உனக்குக் கொடுத்தால் அதை எப்படி செலவழிப்பாய்..?’’

‘’அதெப்படி, அவ்வளவு பணம் யார் தருவார்கள்..?’’ ஆச்சர்யத்துடன் கேட்டார் மகேந்திரன்.

‘’மக்கள் பணத்தைப் பார்த்துப் பார்த்து செலவழிக்கிறீர்கள். அதாவது உணவு, உடை, மருத்துவச் செலவு, சேமிப்பு என்று கணக்குப் பார்த்து, திட்டமிட்டு கையில் இருக்கும் பணத்தை செலவு செய்கிறார்கள். ஏனென்றால், பணம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்கள். கொஞ்சமாக இருக்கும் பணம் வெட்டியாகச் செலவு ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே பார்த்துப்பார்த்து செலவழிக்கிறார்கள்.

அதேநேரம், மனிதருக்கு நேரம் இலவசமாகக் கிடைக்கிறது. எனவே, அதன் அருமை தெரியாமல் 24 மணி நேரத்தையும் தங்கள் விருப்பத்துக்கு வீணாகச் செலவழிக்கிறார்கள். ஒவ்வொரு மணி நேரத்தையும் பணம் என்றே கணக்குப் போட வேண்டும்.

அதாவது, கண் விழிக்கும் ஒவ்வொரு நாளும் 24 லட்சம் ரூபாய் கையில் இருப்பதாக எண்ணிக்கொள்ள வேணும். அந்த பணத்தை கணக்குப் போட்டு செலவழிக்க வேண்டும். வீணாக பொழுதைக் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமது பணம் நஷ்டம் அடைகிறது என்று எண்ணம் வர வேண்டும். பணம் போன்று நேரத்தையும் வீண் செய்யக்கூடாது என்ற எண்ணம் வந்துவிட்டால் நேரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். நேரத்தைக் கட்டுப்படுத்த அறிந்துகொண்டால் பணமும் கட்டுக்குள் வந்துவிடும்’’ என்றார் ஞானகுரு.

‘’நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பொழுதுபோக்குக்கு ஒரு மணி நேரம் கூட செலவிடக்கூடாதா..?’’

‘’மகிழ்ச்சிக்கு எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம். பொழுதுபோக்கு மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி உடலுக்கும் மனதுக்கும் நன்மை செய்யக்கூடியது. எனவே, அதறு தாராளமாக செலவு செய்’’ என்றார் ஞானகுரு.

Leave a Comment