என்ன செய்தார் சைதை துரைசாமி – 130
பொதுநலச் சங்கத்திற்கு மேயர் சைதை துரைசாமி வரவேற்பளித்து, அவர்களுடைய கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த நேரத்தில், மாநகராட்சியில் புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு முறையான பதிவுகள் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
ஏனென்றால், சைதை துரைசாமிக்கு முந்தைய காலம் வரையிலும் திங்கள் கிழமை மட்டுமே பொதுமக்களிடம் மனு வாங்கும் நடைமுறை இருந்தது. பொதுமக்களிடம் பெறப்படும் புகார் மனுக்களை பத்திரமாக வாங்கி வைத்துக்கொள்வதோடு அவர்களுடைய வேலை முடிந்துவிடும். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலுவலர்கள் அத்தனை வேகமும் சுறுசுறுப்பும் காட்டுவது கிடையாது. எனவே, புகார் மனு கொடுத்துவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிந்துகொள்ள பொதுமக்கள் நடையாக நடக்கவேண்டியிருந்தது.
இந்த நிலையில் தான் சைதை துரைசாமி மேயராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அரசு ஊழியர் போன்று தினமும் சைதை துரைசாமி மாநகராட்சிக்கு அலுவலகத்திற்கு வரத் தொடங்கினார். அது மட்டுமின்றி, தினமும் பொதுமக்களிடம் புகார் மனுக்கள் வாங்கும் நடைமுறையைக் கொண்டுவந்தார். குறிப்பிட்ட நாள், நேரம் என்று எந்த வரைமுறையும் வைத்துக்கொள்ளாமல் எல்லா நாட்களும், எல்லா நேரமும் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அந்த புகார் மனுக்களுடன் அதிகாரிகளை சந்தித்தவர், ‘’நேற்று கொடுத்த புகார் மனுக்கள் எத்தனை, அவை எல்லாம் பதிவு செய்யப்பட்ட விபரத்தையும் மேற்கொண்டு அதில் நீங்கள் எடுத்த நடவடிக்கை குறித்த தகவல்களையும் காட்டுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.
மேயர் சைதை துரைசாமி மனுக்கள் குறித்து கேள்வி எழுப்புவார் என்று அலுவலர்கள் யோசிக்கவே இல்லை. அதனால், என்ன பதில் சொல்வது என்றே புரியாமல் தவித்தார்கள்.
- நாளை பார்க்கலாம்
புகார் மனு கொடுத்தவர்களுக்கு மரியாதைஎன்ன செய்