ஷாங்கீ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 348

சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ 10 ஆண்டுகளில் அந்த நாட்டில் அசுத்தமாக ஓடிக்கொண்டிருந்த நதிகளை எல்லாம் சுத்தப்படுத்தி மாபெரும் சாதனை படைத்ததை மேயர் சைதை துரைசாமி அறிந்து வியந்து போயிருந்தார். ஆகவே, சிங்கப்பூர் ஆறுகளில் லீ குவான் யூ செய்த சாதனைகளை எல்லாம் நேரில் பார்த்து அறிந்துகொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தார்.

சிங்கப்பூரில் 5 ஆறுகளை 10 ஆண்டுகளில் சுத்தப்படுத்தி இன்று வரை சுகாதாரமாக வைத்திருக்க முடிகிறது என்றால், அதேபோன்று சென்னை ஆறுகளையும் தூய்மைப்படுத்த முடியும் என்று மேயர் சைதை துரைசாமி நம்பிக்கையுடன் இருந்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற மேயர்கள் உச்சி மாநாட்டில் இதற்கான வாய்ப்பு கிடைத்தது.

சிங்கப்பூர் சுத்தமாகத் திகழ்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகத் திகழும் ஷாங்கீ நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேயர் சைதை துரைசாமி பார்வையிட்டார். இங்கு மக்கள் உபயோகித்த நீரை மிகவும் சிறப்பான முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நீர் முறையான நீர் ஆதாரங்களில் சேகரிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மீண்டும்  வழங்கப்படுகிறது.

இந்த சுத்திகரிப்பு திட்டம் எப்படிப்பட்ட வழிமுறைகளில் செயல்படுத்தப்படுகிறது என்பதை மேயர் சைதை துரைசாமி முழுமையாகவும் தெளிவாகவும் கேட்டறிந்தார். அதோடு, சிங்கப்பூரில் செயல்படும் மிக ஆழமான கழிவு நீர் சுரங்க வழி பற்றிய தகவல்களையும் கேட்டு அறிந்துகொண்டார்.

அன்றைய தினமே சிங்கப்பூரில் உள்ள  மெரினா அணைக்குச் சென்றார். அங்கு கடல் நீருடன் ஆற்று நீர் கலக்கும் முன்னரே சேமிக்கப்படும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்தார். அங்கிருந்த  கலைக்கூடத்தில் சிங்கப்பூர் ஆற்றின்  பழைய  மற்றும் புதிய படங்களைப் பார்வையிட்டார். இவை எல்லாமே மேயர் சைதை துரைசாமிக்கு மிகுந்த நம்பிக்கையூட்டின.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment