அம்பலப்படுத்திய விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக 1,24,053 வாக்கு பெற்று வெற்றிப்பெற்றிருக்கிறது. பாமக பெற்ற வாக்கு 56,296. வாக்கு வித்தியாசம் 67,757 சீமான் டெபாசிட் இழந்து பெற்ற வாக்குகள் 10,602. அதிமுகவும் பாஜகவும் தோல்விக்கு பயந்து போட்டியிடவே இல்லை.
2019 தொடங்கி எல்லா தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று வருகிறது. இதற்கு எம்ஜியார் ஜெயலலிதா போன்று உறுதியான தலைவர் எதிர்க் களத்தில் இல்லை. எடப்பாடி பழனிசாமி, சீமான் போன்றவர்களை எல்லாம் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை என்றே தெரிகிறது.
கடந்த தேர்தலில் 36 ஆயிரம் வாக்குகள் வாங்கிய பா.ம.க. இப்போது 56 ஆயிரம் வாக்குகள் வாங்கிட் டெபாசிட் பெற்றுள்ளதை மாபெரும் வெற்றி என்று கொண்டாடுகிறது.
இது பா.ம.க.வின் கோட்டை என்று கருதப்படும் இடம். இங்கேயே கடுமையான போட்டி கொடுக்க முடியவில்லை என்றால், வேறு எங்கேயும் பா.ம.க.வினால் ஒருபோதும் ஜெயிக்க முடியாது என்பது இந்த தேர்தல் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக பா.ஜ.க. துணையுடன் தேர்தலில் ஜெயிக்கவே முடியாது.
ஆக, தி.மு.க. அல்லது .அ.தி.மு.க. ஆகிய ஏதேனும் ஒரு கட்சியின் தோளில் ஏறினால் மட்டுமே பா.மக.வினால் வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற முடியும் என்பது டாக்டர் ராமதாஸ்க்கு மட்டுமல்ல, திராவிடக் கட்சிகளுக்கும் மிகத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
இன்னொரு விஷயமும் இந்த தேர்தலில் தெளிவாகத் தெரியவந்துள்ளது. அதாவது வன்னியர்கள் தவிர வேறு யாருமே பா.ம.க.வை ஏற்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அந்த அளவுக்கு மற்ற சாதி மக்களை அன்னியப்படுத்தி வன்னியர்களை தனிமைப் படுத்தி உள்ளது.
எனவே, திராவிடக் கட்சி இல்லேன்னா பா.ம.க. ஒரு பூஜ்ஜியம் என்பதை அத்தனை கட்சிகளும் புரிந்துகோண்ட நாள் இன்று. இனி, பா.ம.க. பேரம் பேசும் இடத்தில் இருக்காது, கொடுப்பதை வாங்கிக்கொண்டு ஒட்டிக்கொள்ளும் நிலையிலே இருக்க வேண்டும்.
இதுவே, ஜாதிக் கட்சிகளின் நிலை.