• Home
  • அரசியல்
  • அதானி குடுத்த லஞ்சமே 200 கோடி என்றால் லாபம் எவ்வளவு..?

அதானி குடுத்த லஞ்சமே 200 கோடி என்றால் லாபம் எவ்வளவு..?

Image

அமெரிக்காவுக்கு ரெய்டு விடுவாரா மோடி?

சோலார் பவர் திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கு மட்டுமே 2000 கோடிக்கு மேல் அதானி லஞ்சம் தருகிறார் என்றால், இதில் இருந்து சட்டவிரோதமாக எவ்வளவு பணம் லாபம் அடிக்க முடியும், மக்கள் கட்டும் மின்சார பில் எல்லாம் அதானிக்குத் தான் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் அதானி மீதான ஊழலைப் பேசுவதற்கே யாரும் அஞ்சும் நிலையில் அமெரிக்காவில் அதானி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதானி மற்றும் அவரது 2 உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர், இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,110 கோடி லஞ்சம் கொடுத்து, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் கிடைக்கும் ஒப்பந்தங்களைப் பெற்றதாக அமெரிக்க குற்றவியல் துறை குற்றம் சாட்டியுள்ளது.

முக்கியக் குற்றவாளிகளாக கௌதம் அதானி, சாகர் அதானி, வினித் ஜெயின் ஆகிய மூவர்தான் இந்த மூவரும் இணைந்து செக்யூரிட்டீஸ் மற்றும் வயர் பிராட் குற்றங்களைச் செய்து, பொய்யான மற்றும் தவறான விபரங்களைக் கொடுத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் முதலீட்டைத் திரட்டியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் மோசடிக்கு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு புதுப்பிக்கத்தக்க எனர்ஜி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால் மற்றும் கனடாவின் நிறுவன முதலீட்டாளர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சிரில் கபேன்ஸ், சவுரப் அகர்வால் மற்றும் தீபக் மல்ஹோத்ரா ஆகியோரும் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர் அமெரிக்க சந்தையில் இருந்து முதலீடு பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்குப் பெரிய அளவிலான திட்ட ஒப்பந்தத்தை உருவாக்கி, அதற்கு பொய்யான தகவல்களையும், ஆவணங்களையும் உருவாக்கி மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமெரிக்க அரசின் விசாரணையை தடுத்து ஊழல் சதித்திட்டத்தை மறைக்க இவர்கள் முயன்றனர் என்றும் FBI-யின் உதவி இயக்குநர் டென்னி கூறியுள்ளார் இந்த வழக்கில் FBI, கிரிமினல் பிரிவும் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்ட உள்ளது இந்த குற்றச்செயல்கள் 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் நடந்துள்ளதாகவும், இந்தியாவின் மிகப்பெரிய சோலார் மின் திட்டத்தை உருவாக்கும் மாபெரும் ஒப்பந்தத்தை இந்திய அரசிடம் இருந்து பெறவே கௌதம் அதானி இதை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதானியிடம் இருந்து மத்திய அரசின் SECI சோலார் பவர் வாங்க வேண்டும் என்றால் அதை SECI மாநில அரசு மின்சார வாரியங்களுக்கு விற்க வழி இருக்க வேண்டும். எனவே ஆந்திரா, தமிழ்நாடு, ஒரிசா மற்றும் ஜம்மு காஷ்மீர் மின்சார வாரியங்கள் SECI இடமிருந்து அதானி தரும் மின்சாரத்தை வாங்க அதானி அந்த பொது ஊழியர்களுக்கு 2020 முதல் 2024 வரை 2000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்க பேசப்பட்டுள்ள ஆதாரங்களை மற்றும் மோசடி பண பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்களை அமெரிக்க அரசு அவர்கள் விசாரணையில் சேகரித்து தற்பொழுது அமெரிக்க நீதிமன்றத்தில் அதானிக்கு எதிராக லஞ்ச வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்காவே குற்றம் சாட்டியிருக்கும் நிலையில் மோடி ரெய்டுக்கு உத்தரவு கொடுப்பாரா அல்லது எப்போதும் போல் அமுக்கமாக இருப்பாரா..? தன் நண்பருக்கு ஒரு ஆபத்து என்றால் நேரடியாக அமெரிக்காவுக்கே ரெய்டு அனுப்புவாரோ..?

Leave a Comment