தீர்க்கமுடியாத நோயில் தவிக்கிறேன், தீர்வு என்ன..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : இனி தப்பிக்கவே முடியாது எனும் அளவுக்கு மோசமான நோயில் சிக்கியிருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்..?

  • எஸ்.சரஸ்வதி, சேலம்.

ஞானகுரு ;

நோய், தோல்வி, நஷ்டம் போன்ற் பிரச்னைகளால் பாதிக்கப்படும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என்ற நிலை எந்த ஒரு மனிதருக்கும் வரலாம். இந்த நேரத்தில் இரண்டு வழிகள் மட்டுமேஇருக்கின்றன. முதலாவது, மிகவும் மோசமாக மாட்டிக்கொண்டேன், இனி தப்பிக்கவே முடியாது என்ற மனநிலையில் மேலும் மேலும் வருத்தப்பட்டுக்கொண்டே வாழ்க்கையை நடத்தலாம்.

இரண்டாவது, இந்த நிலையில் இருந்தும் தப்பிக்க ஏதேனும் வழி இருக்கலாம் என்று நம்பிக்கையுடன் தேடும் வழி, இருள் நிறைந்த காட்டுக்குள் ஒற்றை விளக்குடன் பயணித்து தப்பிக்கும் முயற்சி. இந்த பயணத்தில் வழி கிடைக்கலாம் அல்லது கடைசி வரை தேடிக்கொண்டுன் இருக்க நேரிடமால். வழி கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டாலும் எதுவும் கெட்டுப் போகப்போவதில்லை. ஒளியால் மட்டுமே இருட்டை விரட்ட முடியும். உங்களுக்குப் பிடித்த வழியைத் தேர்வு செய்யுங்கள்.

கேள்வி ; தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் எனும் தியரி மனித உயிர்களுக்கும் பொருந்துமா..?

  • பி.விநாயகசுந்தரம், படந்தால் சாலை.

ஞானகுரு ;

மனிதருக்குள் நடக்கும் போட்டியில் வேண்டுமானால் இந்த தியரி சரியாக இருக்கலாம். இயற்கையுடன் நடக்கும் போட்டியில் மனிதருக்கு இது பொருந்தாது. பூகம்பம், சூறாவளி போன்றவற்றுக்கு முன் எத்தகைய திறமைசாலியும் தாக்குப்பிடிக்க முடியாது. முழுயான பயிற்சி பெற்றவர்கள் போரில் கொல்லப்படுவதும், அரைகுறை வீரர்கள் தப்பிப்பதும் சகஜம். ஏனென்றால், இயற்கைக்கு எந்த விதிகளும் கிடையாது.  

Leave a Comment