அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா கேள்வி
கடந்த சில நாட்களாக அமைதி காத்துவந்த திருச்சி சூர்யா மீண்டும் ஒரு முக்கியமான பிரச்னை குறித்து சீரியஸ் கேள்வி கேட்டிருக்கிறார். ’எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். ஏம்பா நீ படிச்சுதான் ஐபிஎஸ் ஆனியா? இல்ல, 11 வருச சர்வீஸ்ல 2 லட்சம் கேஸ் போட்டேன்னு உட்டீங்களே அதே மாதிரி புருடாவா?’ என்று கேட்டுள்ளார்.
மேலும் அவர், ‘எனக்கு சிஆர்பிசி சட்டம் தெரியும், ஐபிசி தெரியும்னு அடிச்சி விட்ட அண்ணாமலைக்கு பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குல, போதுமான முகாந்திரம் இல்லாமல் கைது செய்ய முடியாதுங்கிற அடிப்படை சட்ட அறிவு கூட இல்லையே. ஏம்பா நீ படிச்சுதான் ஐபிஎஸ் ஆனியா?
தேவேந்திரன் யாதவ் ஒரு ஆள் ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’னு நிறுவனத்தை நடத்தி, இந்து மக்களோட சேமிப்பு பணம், ஓய்வூதிய பணம்னு தங்களோட வாழ்வாதார சேமிப்பை டெப்பாசிட் பண்ணி வச்சா, அத தேவநாதன் சாஸ்வதமா (நிரந்தரமா) லவட்டிட்டு போயிருக்காருன்னு ‘இந்து’ மக்கள் குற்றம் சொல்றாங்க அது உங்கள் செவிகளில் கேட்கவில்லையா இந்து மக்களின் பாதுகாவலர்கள் என்று மாறு தட்டிக் கொள்ளும் உங்கள் கூட்டணி கட்சியின் தலைவரும் உங்கள் பாராளுமன்ற வேட்பாளர் இந்து மக்களின் பணத்தை கொள்ளையடித்திருக்கிறார். இதுதான் இந்து மக்களின் பாதுகாவலர்களின் பணியா?
தேர்தல் சமயத்துல அந்த ஆள்கிட்ட இருந்தே கட்சி செலவுக்கு காசு வாங்கிருக்கீங்கனு ஒரு குற்றச்சாட்டு வருதே… உண்மையா மலை? தவறு செய்து இருந்தால் பணத்தை காவல்துறை மீட்டுத்தர வேண்டும். காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை என்றால் கண்டிக்கிறேன் என்று இரட்டை நிலைப்பாடு எடுக்குறியே மலை. இது சரியா? ஒன்னு மண்டைய இப்படி ஆட்டு இல்ல அப்படி ஆட்டு பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டார்.
இப்படி மோசடி செய்ற நபர்களை கூப்பிட்டு எம்பி சீட் கொடுத்து, அட்ரஸே இல்லாத கட்சியை கூட்டணி கட்சினு சொல்லி மேடைல பிரதமர் பக்கத்துல உக்கார வச்சு அழகு பாக்குற சிரிப்பு போலீசை நம்பி தமிழக பா.ஜ.க. இருக்கிற வரைக்கும் தமிழ்நாட்டுல உருப்பட வாய்ப்பு இல்லை. எதிர்கட்சிக்காரன் ஊழலை அம்பலப்படுத்துறேன்னு ஸ்லைடு போட்ட உங்களுக்கு, EDய அனுப்பிருவேன்னு மிரட்ட தெரிஞ்ச உங்களுக்கு, உங்க கவட்டைக்கு கீழ உக்காந்து இந்து மக்களின் 500 கோடியை ஆட்டய போட்டது மட்டும் தெரியலையா? ஏம்பா நீ படிச்சுதான் ஐபிஎஸ் ஆனியா? இதேபோல் தான் ஆருத்ராவிலும் தமிழ்நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்தவனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனிடம் கட்டிங் வாங்கினீர்கள்,அதே போல் இப்போதும் இந்து மக்களிடம் பணத்தை ஆட்டையை போட்ட தேவநாதனுக்கு அடைக்கலம் கொடுத்து கட்டிங் வாங்குறீங்க? இதெல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு தான் அரசியலுக்கு வந்தீங்களா ஜி’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.