• Home
  • சட்டம்
  • புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள் பட்டா வாங்குவது எப்படி..?

புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள் பட்டா வாங்குவது எப்படி..?

Image

விளக்கமளிக்கிறார் வழக்கறிஞர் நிலா

பணம் கொடுத்து வாங்காமல், பூர்விக உரிமை இல்லாமல், கேட்பாரற்று கிடக்கும் இடத்தில் நீண்ட காலம் வசிக்கும் சிலர், அந்த இடத்துக்கு சட்டபூர்வமாக பட்டா வாங்குவதற்கு முயற்சிப்பது உண்டு. அது சாத்தியா என்பது குறித்து விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா.

பொதுவாக புறம்போக்கு நிலம் என்பது அரசுக்கு சொந்தமான பொதுப்பயனுக்கான நிலம். இது பொதுமக்கள் பயன்பாடு, சாலை, குடிநீர், கால்வாய், சரக்கம், பள்ளி, கோயில் உள்ளிட்ட பொதுத்தொழில்கள் அல்லது இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான நிலமாக இருக்கலாம். இதில் தனிநபர் சட்டரீதியாக உரிமை கொண்டிருக்க முடியாது, ஆனால் சில சந்தர்ப்பங்களில் அரசு அனுமதியுடன் பட்டா வழங்கப்படும்.

புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் ஒருவர் பட்டா பெறுவதற்கு சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன. அதன்படி அந்த இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரமாக வசித்து வருவதை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதோடு வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), ரேஷன் கார்டு, குடிநீர் / மின்சாரம் கட்டண ரசீது, வருமான சான்று, பள்ளி சான்றிதழ்கள் போன்றவை குறிப்பிட்ட இடத்திற்கு இருக்க வேண்டும்.

மேலும் அந்த நிலம் யாருக்கும் தேவையில்லாதது, அரசு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த ஆதாரங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலத்துக்கு சர்வேயர் வரி பரிசோதனை செய்வார். மேலும் கிராம நிர்வாக அதிகாரி அல்லது வருவாய் அலுவலர் விசாரணை நடத்துவார்கள். இந்த நிலம் சட்டப்படி வழங்க ஏதுவாக இருக்குமானால், அரசு உத்தரவு கொடுக்கும். அதன் பிறகே பட்டா வழங்கப்படும்.

அதேநேரம் இந்த நிலங்கள் அரசு பயன்படுத்த வேண்டிய நிலமாக இருந்தால், உரிமை கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல் சட்டத்தை மீறி நிலம் பெற்றாலோ, போலி ஆவணங்கள் சமர்ப்பித்தாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு உண்டு,

இது போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு புதுயுகம் தொலைக்காட்சியில், சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சியில் விடை கிடைக்கிறது.

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு சட்டம் ஒரு வகுப்பறை என்ற நிகழ்ச்சியை யாழினியுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார் பிரபல வழக்கறிஞர் நிலா. பிரபல வழக்கறிஞர்கள் தினமும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்களின் சந்தேகம் தீர்க்கிறார்கள். போன் செய்தும் சந்தேகம் கேட்கலாம். சட்டத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்.

ஞானகுரு இணையத்திலும் உங்கள் கேள்விகளை அனுப்பிவையுங்கள். உங்கள் சந்தேகங்களை நிலா நிச்சயம் தீர்த்து வைப்பார்.

YouTube player

Leave a Comment