விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா
சைபர் கிரைம் (Cyber Crime) என்பது செல்போன், கம்ப்யூட்டர் உள்ளிட டிஜிட்டல் சாதனங்கள் மூலம் செய்யப்படும் குற்றச்செயல்களைக் குறிக்கிறது. மொபைல், அல்லது இணைய கணக்குகளை அனுமதி இல்லாமல் பிரவேசித்து தகவல்களையும் பணத்தையும் திருடி விடுகிறார்கள். இது குறித்து விளக்கம் தரும் வகையில் புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 முதல் 9 மணி வரை, ‘சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சியை நடத்துகிறார் பிரபல வழக்கறிஞர் நிலா.
இந்த விவாதத்தில் வழக்கறிஞர் நிலாவுடன் யாழினியும் இணைந்து நடத்துகிறார். நேயர்களின் சந்தேகங்களை பிரபல வழக்கறிஞர்கள் உதவியுடன் தீர்த்து வைக்கிறார்கள். இந்த விவாதத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்படுகிறது. குறிப்பாக போலியான மின்னஞ்சல், வாட்ஸ்அப் மெசேஜ், அல்லது வெப்சைட் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி நபர்களிடமிருந்து பாஸ்வேர்ட், ஓடிபி, கிரெடிட் கார்டு விவரங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
சமூக ஊடகங்களான ஃபேஸ்புக் மூலம் நண்பர்கள் பேரில் பணம் கேட்பது, பிறரின் புகைப்படங்களைத் திருடி அவதூறு பரப்புவது போன்றவைகளுகுத் தீர்வுகள் கூறப்படுகின்றன..
மேலும் விரிவாக அறிய கீழ்க்கண்ட லிங்க் தொட்டு எபிசோடு பாருங்கள். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.