• Home
  • அரசியல்
  • அதானியின் மெகா மோசடி அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்.

அதானியின் மெகா மோசடி அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்.

Image

அண்ணாமலை அடடே விளக்கம்

இந்தியாவில் அரசியல் பூகம்பம் கிளப்பும் வகையில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் செபியின் தலைவர் மாதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகிய இருவரும், பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பங்குகளை வைத்திருந்ததாக ஆவணங்களை வெளியிட்டு குற்றம் சாட்டியிருக்கிறது.

இந்தியா இன்ஃபோலைனின் ‘இ.எம். ரீசர்ஜண்ட் ஃபண்ட் மற்றும் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்’ நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி தகவல்கள் மிகவும் தெளிவற்றதாகவும் சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது’ என்று கூறியுள்ளது.

அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச் சந்தையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2023ம் ஆண்டிலேயே ஓர் அறிக்கை வெளியிட்டது. இதனை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குப்பையில் போடப்பட்டது. அதேபோல், சிபிஐ அல்லது நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்படவில்லை.

அதேநேரம், அதானி மெகா ஊழல் விசாரணை செபியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது அதானியின் ஊழலை விசாரிக்கும் நபரே இப்போது மோசடியில் ஈடுபட்டுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.

அதானியின் சம்மந்தி, செபி ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக இருப்பதால் தான் அதானியின் ஊழலை விசாரிக்க மறுப்பதாக இந்தியா கருதி வந்தவேளையில், இப்போது வந்துள்ள இந்த தகவல் அதிர்ச்சியின் உச்சம். செபியின் தலைவரே மறைமுகமாக, அதானியின் “ஷெல் கம்பெனியின்” பங்குதாரராம். இதற்கு இந்தியாவின. பிரதமரும், “நிதி மேலாண்மை என்றால் என்னவென்று தெரியாத நிதி அமைச்சரும்” பதில் சொல்லியாக வேண்டும் என்று இந்தியா முழுக்க மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

இந்த நேரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூரில் பேசுகையில், ‘’ஹிண்டன்பர்க் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டு பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் லாபம் பார்க்கிறது. உலக அளவில் முக்கிய நிறுவனங்களைக் குறி வைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம்…’’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

இதை வைத்துப் பார்க்கும்போது இப்போதும் அதானி மீதும் செபி மீதும் எந்த விசாரணையும் நடைபெறப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மோடியின் ராஜ்ஜியத்தில் அதானிக்கு செம ஜாலி தான்.

Leave a Comment