• Home
  • அரசியல்
  • செபி தலைவர் மாதாவிக்கு ஹிண்டன்பர்க் நேரடி சவால்

செபி தலைவர் மாதாவிக்கு ஹிண்டன்பர்க் நேரடி சவால்

Image

ராகுல் மீது பா.ஜ.க. ராஜதுரோகக் குற்றச்சாட்டு

அமெரிக்காவை சேர்ந்த ஷார்ட் செல்லிங் நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களை குறிவைத்து நிதி முறைகேடுகளை அம்பலப்படுத்தி  அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் அதானி குழுமத்தை குறிவைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல, ‘செபி’அமைப்பையும் குறிவைத்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது.

இந்த அறிக்கையை முழுமையாகப் பறக்கணிக்கிறோம் என்று அதானி அறிவித்துவிட்டார். செபி தலைவர் பதவி விலகி குற்றச்சாட்டை சந்திக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் ஹிண்டன்பர்க் நிறுவனம் செபி தலைவர் மாதாபி மீது குற்றச்சாட்டுகள் கூறியிருக்கிறது.  அதாவது செபின் முழுநேர உறுப்பினராக இருந்துகொண்டே, அதானி நிறுவனத்தில் முதலீடு செய்திருகிறார். செபியின் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்ட 2 வாரங்களுக்குப் பிறகு மாதாபி தனது பங்குகளை கணவர் பெயருக்கு மாற்றியிருக்கிறார். செபியின் தலைவராக இருந்துகொண்டே தனது தனிப்பட்ட மின்னஞ்சலைப் பயன்படுத்தி தனது கணவரின் பெயரில் வணிகம் செய்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது.

இது மட்டுமின்றி, எங்கள் ஆதாரபூர்வக் குற்றாச்சாட்டுகளை இந்திய மக்களுக்குத் தெளிவுபடுத்த பொதுவிசாரணைக்குத் தயாரா என்று மாதாபிக்கு ஹிண்டன்பர்க் நேரடியாக சவால் விடுத்துள்ளது.

இந்த நிலையில் அதானிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராகுல் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத். அவர், ‘’அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு அவரே பெருமளவில் நிதியுதவி செய்கிறார். அவரது தூண்டுதலின்பேரில் ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது. தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் ஏஜென்டாக ராகுல் காந்தி செயல்படுகிறார். பிரதமர் மோடி மீதான வெறுப்பால் தாய்நாட்டுக்கு எதிராக ராகுல் செயல்படுகிறார்’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

வழக்கமாக எல்லா தவறுகளுக்கும் நேருவை குற்றம் சாட்டும் பா.ஜ.க. இப்போது மட்டும் ஏன் ராகுல் மீது குற்றம் சாட்டுகிறது. பங்குச்சந்தை ஊழலை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமா அல்லது நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்குமா என்பதே மக்கள் கேள்வி.

Leave a Comment