லொக் லொக்கிற்கு தீர்வு இதோ

Image

மெடிக்கல் டிப்ஸ்

நுரையீரல், தொண்டை அல்லது சுவாச பாதையில் தூசுகள் நுழையும்போது அதை வெளியேற்ற இருமல் வருகிறது. சிலருக்கு இரவு நேரத்தில் மட்டும் இருமல் வரும். நன்கு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் இருமல் வரும். இந்த வறட்டு இருமல் ஏன் ஏற்படுகிறது என்பதை அறிந்தால் தான் இதனை தீர்க்க முடியும்.

பொதுவாக சுவாசப் பாதையில் தொற்று, சைனஸ் பிரச்சனை, நிமோனியா போன்ற பிரச்னைகளால் வறட்டு இருமல் வரலாம். தூசு, மகரந்தம் போன்றவையாலும் வறட்டு இருமல் வரலாம். இந்த நேரத்தில் சளி வெளிவராது என்றாலும் தொண்டை வறண்டு, புண்ணாகிவிடும்.  

வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியமே போதும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்கலாம். மஞ்சள் தூளில் உள்ள ஆன்டிபயாடிக் தன்மை இருமலை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். அதேபோல் ஒரு டம்ளர் நீரில் சோம்பு அல்லது பட்டையைப் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். துளிசியில் சக்தி வாய்ந்த ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடிக்கலாம் அல்லது வெறுமனே வாயில் போட்டு மென்று விழுங்கலாம். பாலில் தேன் கலந்து குடிப்பதும் வறட்டு இருமலுக்கு நல்லது.

Leave a Comment