• Home
  • அரசியல்
  • மீண்டும் முதல்வர் ஆகிறார் ஹேமந்த் சோரன்..?

மீண்டும் முதல்வர் ஆகிறார் ஹேமந்த் சோரன்..?

Image

பா.ஜ.க. தீவிர ஆலோசனை

நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றத்திற்கு ஆதாரம் இல்லை. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் வெளியே வந்தார். அவருக்கு மக்கள் பெருவரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை ஹேமந்த் சோரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி 31ம் தேதி நடத்தப்பட்ட 7 மணி நேர தொடர் விசாரணைக்குப் பிறகு, அவரை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்து முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

ஹேமந்த் சோரனை கைது செய்த அமலாக்கத் துறை அவரை ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பானு பிரதாப் பிரசாத், முகமது சதாம் உசேன் மற்றும் அப்சர் அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய முன் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 13ம் தேதி இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை நேற்று காலை ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய உத்தரவிட்டார்.

இதையடுத்து மத்திய சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் வெளியே வந்தார். வெள்ளைநிற பேன்ட் மற்றும் குர்தா அணிந்தவாறு வெளியே வந்த அவரை, சிறைச்சாலைக்கு வெளியே கூடி இருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களைப் பார்த்து இரு கைகளையும் உயர்த்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்த ஆண்டின் இறுதியில் ஜார்க்கண்ட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையாகி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன் இவர் சிறையில் இருந்த நாட்களில் இவரது மனைவி கல்பனா கட்சியையும் அவர்களது தொண்டர்களையும் கட்டுக்கோப்பாக அரவணைத்து சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி பிரச்சாரங்களிலும் கலந்து கொண்டு அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹேமந்த் சோரனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் பா.ஜ.க. தவித்துவருகிறது. ஹேமந்த் சோரனை எதிர்த்து தேர்தல் பிரசாரம் செய்தால் தோல்வி நிச்சயம் என்பதால் அடுத்தகட்ட ஆய்வு செய்துவருகிறார்கள்.

Leave a Comment