மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்

Image

நிஜம்

நான் சொல்வதெல்லாம்

உண்மை.

உண்மையைத் தவிர

வேறில்லை.

இப்படித்தான்

பொய் தன்னை

தன்னடக்கத்துடன்

வெளிப்படுத்திக் கொள்ளும்.

  • ரதிராஜ்

அற்ற குளம்

அறுநீர்ப் பறவை இல்லை

வற்றிய குளம் என்று சொல்லக்

கரைகளாவது இருக்கட்டும்

என்றாவது பூமிக்கு வரும் மழை

தங்க இடமின்றி

ஏமாந்துபோவது அநியாயம்.

  • கி.சரஸ்வதி

நிர்வாணம்

அவளை ஆடைகளின்றிப் பார்த்து விட்டதால்

அவளை முழுமையாகப் பார்த்து விட்டதாக நம்புகிறாயா?

எங்கே… அவள் கனவுகளைப் பற்றிச் சொல் பார்ப்போம்!

அவள் இதயத்தை நொறுக்குவது எது, சொல்?

அவளைப் பரவசப்படுத்துவது என்ன?

நெஞ்சுருகி அழ வைப்பது என்ன?

அவள் குழந்தைப் பருவத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன்.

அது கூட வேண்டாம்.

நீ இல்லாத அவள் வாழ்வின் ஏதேனும் ஒரு பகுதியைப் பற்றிச் சொல்?

அவள் சருமத்தை நீ பார்த்திருக்கலாம்;

நிர்வாண உடலையும் தொட்டிருக்கலாம்.

ஆனால் நீ ஒரு முறை கூடத் திறந்து பார்க்காமல்

சற்று நேரம் கையில் வைத்திருந்த

அந்தப் புத்தகத்தைப் போலத் தான் அவளும்.

– டோமினிக் மேத்யூ ஜாக்சன்.

Leave a Comment